பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!
Sep 12, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறியது தீவிர பாதுகாப்புக் குறைபாடு என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாட்களில் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். இவர்கள் கோஷமிட்டபடியே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினர். மேலும், தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த கலர் புகைக் குண்டுகளையும் வீசினர். இவர்களில் ஒருவரை எம்.பி.க்கள் பிடிக்க, மற்றொருவரை அவைப் பாதுகாவலர்கள் பிடித்தனர்.

அதேபோல, இந்த சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், 2 பேர் கோஷமிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். 4 பேரும் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு, 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சபாநாயரிடம் இருப்பதால், இதற்கு சபாநாயகர் பொறுப்பேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி நடந்த விவகாரம் தொடர்பாக மக்களவை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 15 – 20 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கீழ் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, இது தொடர்பாக சபாநாயகர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதன் அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பப்படும்.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்துவல் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அரசியலமைப்புச் சபையின் ஆணையாகும். ஆகவே, பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக மற்றும் சட்ட மாற்றமாகும். இதுகுறித்து அனைவரின் கருத்தும் தேவை” என்றார்.

Tags: Amit shaParliament attackuniform civil code
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

Next Post

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies