பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!
Oct 25, 2025, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் காகத்தி காவல் நிலைய எல்லைக்குட்டபட்டது வந்தமுரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூக இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் மேற்கண்ட இளைஞரின் வீட்டுக்கு வந்த அவரது தாயை வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து, நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள்.

தகவலறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பா விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவம் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ், பிரிவு 354, பிரிவு 323, பிரிவு 509 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடூரமான செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் மேற்கூறிய விதிகளை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), பிற தொடர்புடைய சட்ட அம்சங்களுடன் சேர்க்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆன் சைட்டில் விசாரித்து, அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, விசாரணைக் குழு இன்று கர்நாடக புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

Tags: karnatakaBelguamWoman commission
ShareTweetSendShare
Previous Post

தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்!

Next Post

முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தான்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies