பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!
Mar 15, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் காகத்தி காவல் நிலைய எல்லைக்குட்டபட்டது வந்தமுரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூக இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் மேற்கண்ட இளைஞரின் வீட்டுக்கு வந்த அவரது தாயை வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து, நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள்.

தகவலறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பா விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவம் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ், பிரிவு 354, பிரிவு 323, பிரிவு 509 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடூரமான செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் மேற்கூறிய விதிகளை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), பிற தொடர்புடைய சட்ட அம்சங்களுடன் சேர்க்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆன் சைட்டில் விசாரித்து, அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, விசாரணைக் குழு இன்று கர்நாடக புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

Tags: karnatakaBelguamWoman commission
ShareTweetSendShare
Previous Post

தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்!

Next Post

முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தான்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies