பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!
Jul 31, 2026, 04:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் காகத்தி காவல் நிலைய எல்லைக்குட்டபட்டது வந்தமுரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூக இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் மேற்கண்ட இளைஞரின் வீட்டுக்கு வந்த அவரது தாயை வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து, நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள்.

தகவலறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பா விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவம் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ், பிரிவு 354, பிரிவு 323, பிரிவு 509 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடூரமான செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் மேற்கூறிய விதிகளை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), பிற தொடர்புடைய சட்ட அம்சங்களுடன் சேர்க்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆன் சைட்டில் விசாரித்து, அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, விசாரணைக் குழு இன்று கர்நாடக புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

Tags: karnatakaBelguamWoman commission
ShareTweetSendShare
Previous Post

தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்!

Next Post

முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தான்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies