பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!
Sep 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெல்காம் சம்பவம்: மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் காகத்தி காவல் நிலைய எல்லைக்குட்டபட்டது வந்தமுரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூக இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் மேற்கண்ட இளைஞரின் வீட்டுக்கு வந்த அவரது தாயை வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து, நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள்.

தகவலறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பா விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவம் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ், பிரிவு 354, பிரிவு 323, பிரிவு 509 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடூரமான செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் மேற்கூறிய விதிகளை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), பிற தொடர்புடைய சட்ட அம்சங்களுடன் சேர்க்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆன் சைட்டில் விசாரித்து, அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, விசாரணைக் குழு இன்று கர்நாடக புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

Tags: karnatakaBelguamWoman commission
Share
Tweet
SendShare
Previous Post

தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்!

Next Post

முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தான்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies