ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!
Oct 25, 2025, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால் அது ஐபிஎல் என்றே சொல்லலாம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்தது முதலே அவரை கேப்டனாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற சர்ச்சை பரவலாக வந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாரபூர்வமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிவிப்பு வெளியானது.

அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டனுக்கான ரேஸில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் இருந்தனர். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் வருகையின் போது, பும்ரா தனது சமூக வலைத்தளம் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், இதயம் நொறுங்குவது போன்ற எமோஜியை பதிவிட்டு அதிருப்தையை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

மும்பை அணியால் சூர்யகுமார் யாதவ் வாங்கப்பட்டதற்கு ரோகித் சர்மாவே முதன்மை காரணம். கேகேஆர் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி இருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடியப் போதே சூர்யகுமார் யாதவின் திறமையை ரோகித் சர்மா அறிந்து வைத்திருந்தார். இதுகுறித்து 2011ஆம் ஆண்டிலேயே ரோகித் சர்மா தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருப்பார்.

அதன்பின் சூர்யகுமார் யாதவை மும்பை அணியில் கொண்டு வந்து வாய்ப்பு வழங்கியதோடு, அவருக்கு இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற்றியதிலும் ரோகித் சர்மாவின் பங்கு அதிகம். இதனால் தனது கேப்டனுக்காக சூர்யகுமார் யாதவ் ஓபனாக பேசியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் கேப்டன்சி மாற்றம் குறித்து சக வீரர்களுக்கு கூட மும்பை அணி நிர்வாகம் ஆலோசிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Tags: rohit sharmaSurya kumar yadavCricketers
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!

Next Post

நாடாளுமன்ற அத்துமீறல்: 6-வது நபர் கைது!

Related News

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies