ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!
Jul 24, 2025, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால் அது ஐபிஎல் என்றே சொல்லலாம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்தது முதலே அவரை கேப்டனாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற சர்ச்சை பரவலாக வந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாரபூர்வமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிவிப்பு வெளியானது.

அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டனுக்கான ரேஸில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் இருந்தனர். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் வருகையின் போது, பும்ரா தனது சமூக வலைத்தளம் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், இதயம் நொறுங்குவது போன்ற எமோஜியை பதிவிட்டு அதிருப்தையை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

மும்பை அணியால் சூர்யகுமார் யாதவ் வாங்கப்பட்டதற்கு ரோகித் சர்மாவே முதன்மை காரணம். கேகேஆர் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி இருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடியப் போதே சூர்யகுமார் யாதவின் திறமையை ரோகித் சர்மா அறிந்து வைத்திருந்தார். இதுகுறித்து 2011ஆம் ஆண்டிலேயே ரோகித் சர்மா தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருப்பார்.

அதன்பின் சூர்யகுமார் யாதவை மும்பை அணியில் கொண்டு வந்து வாய்ப்பு வழங்கியதோடு, அவருக்கு இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற்றியதிலும் ரோகித் சர்மாவின் பங்கு அதிகம். இதனால் தனது கேப்டனுக்காக சூர்யகுமார் யாதவ் ஓபனாக பேசியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் கேப்டன்சி மாற்றம் குறித்து சக வீரர்களுக்கு கூட மும்பை அணி நிர்வாகம் ஆலோசிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Tags: rohit sharmaSurya kumar yadavCricketers
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!

Next Post

நாடாளுமன்ற அத்துமீறல்: 6-வது நபர் கைது!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies