நாடாளுமன்ற அத்துமீறல்: 6-வது நபர் கைது!
Aug 18, 2025, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: 6-வது நபர் கைது!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியான லலித் ஜாவுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, அத்துமீறலில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவைச் சேர்ந்த சாகர் சர்மா, பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

மேலும், இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியானாவைச் சேர்ந்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் மோகன் ஜா என்பவர் டெல்லி போலீஸில் சரணடைந்தார். அவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 6-வது நபரை டெல்லி போலீஸார் இன்று கைது செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டிருப்பவர் ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான லலிதா ஜா, டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பியோடியபோது மகேஷ் குமாவத்தான் அடைக்கலம் கொடுத்து, தனக்குச் சொந்தமான இடத்தில் தங்க வைத்திருக்கிறார்.

அதோடு, முதலில் கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களை உடைத்து அழித்ததிலும் இவருக்கு பங்கு இருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். மேலும், நீலம் தேவியோடு மகேஷ் குமாவத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தவிர, மகேஷ் குமாவத் கடந்த 13-ம் தேதி டெல்லி வந்ததும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மகேஷ் குமாவத்தின் நெருங்கிய உறவினரான கைலாஷ் என்பவரையும் டெல்லி போலீஸார் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Tags: Parliamentarrestedsecurity breachaccused mahesh kumawat
ShareTweetSendShare
Previous Post

ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!

Next Post

காசி தமிழ் சங்கமம் 2.0 : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies