உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!
Sep 9, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரம் என 65,000-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் 3,400 கோடி ரூபாய் செலவில் ‘சூரத் வைரப் பங்குச்சந்தை’ என்கிற மெகா அலுவலகம்  கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் மொத்த பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடியாகும்.

தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இக்கட்டடத்தை கட்டி முடித்திருக்கிறது.

இக்கட்டடத்தில் மொத்தம் 4,700 அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும். உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாகக் கருதப்படும் அமெரிக்காவின் பென்டகனைவிட, இந்த சூரத் வைர வர்த்தக மையம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். மேலும், மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாகவும் இது இருக்கும்.

தவிர, இறக்குமதி, ஏற்றுமதிக்கான அதிநவீன ‘சுங்க அனுமதி இல்லம்’, சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதி ஆகியவற்றை இந்த பங்குச்சந்தை உள்ளடக்கி இருக்கிறது.

இந்த சூரத் வைரப் பங்குச்சந்தை அலுவலக கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதேபோல, 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் சூரத் விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags: PM ModiGujratInaguratessurat diamond bourse
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை!

Next Post

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்!

Related News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies