உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!
Oct 25, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரம் என 65,000-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் 3,400 கோடி ரூபாய் செலவில் ‘சூரத் வைரப் பங்குச்சந்தை’ என்கிற மெகா அலுவலகம்  கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் மொத்த பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடியாகும்.

தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இக்கட்டடத்தை கட்டி முடித்திருக்கிறது.

இக்கட்டடத்தில் மொத்தம் 4,700 அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும். உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாகக் கருதப்படும் அமெரிக்காவின் பென்டகனைவிட, இந்த சூரத் வைர வர்த்தக மையம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். மேலும், மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாகவும் இது இருக்கும்.

தவிர, இறக்குமதி, ஏற்றுமதிக்கான அதிநவீன ‘சுங்க அனுமதி இல்லம்’, சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதி ஆகியவற்றை இந்த பங்குச்சந்தை உள்ளடக்கி இருக்கிறது.

இந்த சூரத் வைரப் பங்குச்சந்தை அலுவலக கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதேபோல, 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் சூரத் விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags: PM ModiGujratInaguratessurat diamond bourse
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை!

Next Post

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்!

Related News

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies