உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரம் என 65,000-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் 3,400 கோடி ரூபாய் செலவில் ‘சூரத் வைரப் பங்குச்சந்தை’ என்கிற மெகா அலுவலகம்  கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் மொத்த பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடியாகும்.

தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இக்கட்டடத்தை கட்டி முடித்திருக்கிறது.

இக்கட்டடத்தில் மொத்தம் 4,700 அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும். உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாகக் கருதப்படும் அமெரிக்காவின் பென்டகனைவிட, இந்த சூரத் வைர வர்த்தக மையம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். மேலும், மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாகவும் இது இருக்கும்.

தவிர, இறக்குமதி, ஏற்றுமதிக்கான அதிநவீன ‘சுங்க அனுமதி இல்லம்’, சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதி ஆகியவற்றை இந்த பங்குச்சந்தை உள்ளடக்கி இருக்கிறது.

இந்த சூரத் வைரப் பங்குச்சந்தை அலுவலக கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதேபோல, 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் சூரத் விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags: PM ModiGujratInaguratessurat diamond bourse
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை!

Next Post

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies