பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

சங்க காலத்தில் ஒய்மா நாடு என்றழைக்கப்பட்ட நகரம். ஒய்மாநாட்டு நல்லியகோடன் என்ற சங்ககால மன்னனின் மீது பாடப்பட்ட புகழ்பெற்ற சிறுபாணாற்றுப்படை நூலுக்கு உரித்தான ஊர். பராந்தக சோழனால் கற்கோவிலாக கட்டப்பட்ட திந்திரிணீஸ்வரர் ஆலயம் அமைந்திருந்ததால், திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டு, திண்டிவனம் என்றானது.

சோழர்களின் பெருமைக்குரிய கலாச்சார தொன்மத்தை தாங்கிய ராஜராஜ சோழனின் 21 கல்வெட்டுகள் திந்திரிணீஸ்வரர் கோவிலில் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்த மண்ணில் பிறந்தவர். அவர் முதல் அமைச்சரானதும், மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர்.

தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டவர். தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைத்தவர். பள்ளிகளில் திருக்குறளைக் கட்டாய பாடமாக்கியவர்.

சிறந்த தமிழ் கவிஞர்களை கௌரவிக்க அரசவைக் கவிஞர் எனும் இருக்கையை நிறுவியவர். கிணறு வெட்ட மானியம் வழங்கியவர். பயிர் மற்றும் கால்நடை காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.

மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்த ஓமந்தூரார் பிறந்த மண்ணில், இந்த வருடம் மே மாதம் கள்ளச்சாராயம் பருகியதால் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

கள்ளச் சாராய விற்பனையை செய்து வந்தது, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமான, திண்டிவனம் வார்டு கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா.

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு, 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கிய திமுக அரசு, சென்னை வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழங்கிய நிவாரண தொகை 5 லட்சம், வெடிவிபத்தில் இறந்தால் 3 லட்சம் மட்டுமே.

கள்ளச்சாராயம் விற்றவர்களுக்குக் கூட 50,000 நிவாரணம் வழங்கியது. மக்களை சாராயம் குடிக்க வைத்து, திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே திமுக ஆட்சி நடக்கிறது.

திண்டிவனம் நகராட்சித் துணைத் தலைவராக இருப்பவர், பட்டியல் சமூகம் என்பதால், அவரைத் தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக.

வார்டுகளில் நடைபெறும் ஆய்வுகளுக்குக் கூட துணைத்தலைவரை அழைப்பது இல்லை. இந்த மாவட்ட அமைச்சர் பொன்முடி சமூகநீதி சமத்துவம் திராவிட மாடல் என்று காலாவதியான வசனத்தைப் பேசுவார்.

ஒரு பட்டியலின சகோதரியை, மேடையில் வைத்து ஜாதியை குறிப்பிட்டு பேசியவர் அவர். இன்று வரை இந்த பிரச்சினையைப் பற்றியும் பேசவில்லை.

அமைச்சர் பொன்முடி மீது நடந்த அமலாக்கத்துறை சோதனையை, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்தோனேஷியா மற்றும் துபாயில் அவர் வாங்கிய நிறுவனங்கள், அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார்.

மக்களை மடைமாற்ற இந்தித் திணிப்பு என்பார்கள். பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழைத்தான் நாடு முழுவதும் திணிக்கிறார். நாளைய தினம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறவிருக்கிறது. தமிழைத் தொடர்ந்து பெருமைப்படுத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியைத் திணிக்கிறார் என்றால், மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி. பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க, தமிழகமும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

பனிப்பொழிவை அனுபவிக்க குல்மார்க்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies