பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

சங்க காலத்தில் ஒய்மா நாடு என்றழைக்கப்பட்ட நகரம். ஒய்மாநாட்டு நல்லியகோடன் என்ற சங்ககால மன்னனின் மீது பாடப்பட்ட புகழ்பெற்ற சிறுபாணாற்றுப்படை நூலுக்கு உரித்தான ஊர். பராந்தக சோழனால் கற்கோவிலாக கட்டப்பட்ட திந்திரிணீஸ்வரர் ஆலயம் அமைந்திருந்ததால், திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டு, திண்டிவனம் என்றானது.

சோழர்களின் பெருமைக்குரிய கலாச்சார தொன்மத்தை தாங்கிய ராஜராஜ சோழனின் 21 கல்வெட்டுகள் திந்திரிணீஸ்வரர் கோவிலில் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்த மண்ணில் பிறந்தவர். அவர் முதல் அமைச்சரானதும், மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர்.

தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டவர். தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைத்தவர். பள்ளிகளில் திருக்குறளைக் கட்டாய பாடமாக்கியவர்.

சிறந்த தமிழ் கவிஞர்களை கௌரவிக்க அரசவைக் கவிஞர் எனும் இருக்கையை நிறுவியவர். கிணறு வெட்ட மானியம் வழங்கியவர். பயிர் மற்றும் கால்நடை காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.

மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்த ஓமந்தூரார் பிறந்த மண்ணில், இந்த வருடம் மே மாதம் கள்ளச்சாராயம் பருகியதால் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

கள்ளச் சாராய விற்பனையை செய்து வந்தது, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமான, திண்டிவனம் வார்டு கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா.

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு, 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கிய திமுக அரசு, சென்னை வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழங்கிய நிவாரண தொகை 5 லட்சம், வெடிவிபத்தில் இறந்தால் 3 லட்சம் மட்டுமே.

கள்ளச்சாராயம் விற்றவர்களுக்குக் கூட 50,000 நிவாரணம் வழங்கியது. மக்களை சாராயம் குடிக்க வைத்து, திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே திமுக ஆட்சி நடக்கிறது.

திண்டிவனம் நகராட்சித் துணைத் தலைவராக இருப்பவர், பட்டியல் சமூகம் என்பதால், அவரைத் தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக.

வார்டுகளில் நடைபெறும் ஆய்வுகளுக்குக் கூட துணைத்தலைவரை அழைப்பது இல்லை. இந்த மாவட்ட அமைச்சர் பொன்முடி சமூகநீதி சமத்துவம் திராவிட மாடல் என்று காலாவதியான வசனத்தைப் பேசுவார்.

ஒரு பட்டியலின சகோதரியை, மேடையில் வைத்து ஜாதியை குறிப்பிட்டு பேசியவர் அவர். இன்று வரை இந்த பிரச்சினையைப் பற்றியும் பேசவில்லை.

அமைச்சர் பொன்முடி மீது நடந்த அமலாக்கத்துறை சோதனையை, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்தோனேஷியா மற்றும் துபாயில் அவர் வாங்கிய நிறுவனங்கள், அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார்.

மக்களை மடைமாற்ற இந்தித் திணிப்பு என்பார்கள். பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழைத்தான் நாடு முழுவதும் திணிக்கிறார். நாளைய தினம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறவிருக்கிறது. தமிழைத் தொடர்ந்து பெருமைப்படுத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியைத் திணிக்கிறார் என்றால், மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி. பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க, தமிழகமும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

பனிப்பொழிவை அனுபவிக்க குல்மார்க்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies