லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Jul 25, 2025, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லிபியா கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

படகு விபத்துகள் அதிகமாக நடக்கும் நாடாக லிபியா விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, இஸ்லாமிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக  படகுகளில் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

குறிப்பாக, எத்தியோப்பியா, எரித்திரியா, நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்தாலி வழியாக கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைவதற்கு லிபியா மற்றும் துனிசியா ஆகியவைதான் புறப்படும் முக்கியப் பகுதிகளாக இருக்கின்றன.

ஆனால், மோசமான படகுகள், அதிக அளவிலான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வானிலை காரணமாக படகுகள் கடலில் மூழ்கி விடுகின்றன. அந்த வகையில், லிபியா கடல் பகுதியில் நடந்த படகு விபத்துகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த படகு விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதுதான் மிகப்பெரிய படகு விபத்தாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து 86 புலம்பெயர் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவை நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. இப்படக்கில் காம்பியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்தப் படகு பாரம் தாங்காமல் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த லிபியா கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இதில், 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அந்நாட்டின் தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேசமயம், மீதமுள்ள 61 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இவர்களது உடல்களும் கரை ஒதுங்கவில்லை. எனினும், மேற்கண்ட 61 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Tags: accidentboatLibia
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Next Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies