லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லிபியா கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

படகு விபத்துகள் அதிகமாக நடக்கும் நாடாக லிபியா விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, இஸ்லாமிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக  படகுகளில் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

குறிப்பாக, எத்தியோப்பியா, எரித்திரியா, நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்தாலி வழியாக கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைவதற்கு லிபியா மற்றும் துனிசியா ஆகியவைதான் புறப்படும் முக்கியப் பகுதிகளாக இருக்கின்றன.

ஆனால், மோசமான படகுகள், அதிக அளவிலான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வானிலை காரணமாக படகுகள் கடலில் மூழ்கி விடுகின்றன. அந்த வகையில், லிபியா கடல் பகுதியில் நடந்த படகு விபத்துகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த படகு விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதுதான் மிகப்பெரிய படகு விபத்தாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து 86 புலம்பெயர் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவை நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. இப்படக்கில் காம்பியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்தப் படகு பாரம் தாங்காமல் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த லிபியா கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இதில், 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அந்நாட்டின் தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேசமயம், மீதமுள்ள 61 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இவர்களது உடல்களும் கரை ஒதுங்கவில்லை. எனினும், மேற்கண்ட 61 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Tags: boatLibiaaccident
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Next Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies