லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 03:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லிபியா கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

படகு விபத்துகள் அதிகமாக நடக்கும் நாடாக லிபியா விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, இஸ்லாமிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக  படகுகளில் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

குறிப்பாக, எத்தியோப்பியா, எரித்திரியா, நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்தாலி வழியாக கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைவதற்கு லிபியா மற்றும் துனிசியா ஆகியவைதான் புறப்படும் முக்கியப் பகுதிகளாக இருக்கின்றன.

ஆனால், மோசமான படகுகள், அதிக அளவிலான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வானிலை காரணமாக படகுகள் கடலில் மூழ்கி விடுகின்றன. அந்த வகையில், லிபியா கடல் பகுதியில் நடந்த படகு விபத்துகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த படகு விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதுதான் மிகப்பெரிய படகு விபத்தாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து 86 புலம்பெயர் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவை நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. இப்படக்கில் காம்பியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்தப் படகு பாரம் தாங்காமல் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த லிபியா கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இதில், 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அந்நாட்டின் தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேசமயம், மீதமுள்ள 61 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இவர்களது உடல்களும் கரை ஒதுங்கவில்லை. எனினும், மேற்கண்ட 61 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Tags: accidentboatLibia
Share
Tweet
SendShare
Previous Post

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Next Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies