மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!
Sep 10, 2025, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!

மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுரை!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இதையடுத்து, இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் பப்ளிக் பள்ளியின் நூற்றாண்டு விழா கலந்துகொண்டார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, “மைக்ரோசாப்ட் சி.இ.ஐ. சத்யா நாதெல்லா போன்ற சிறந்த முன்னாள் மாணவர்களை உருவாக்கியதற்காக ஐதராபாத் பப்ளிக் பள்ளியை பாராட்டுகிறேன்.

ஐதராபாத் பப்ளிக் பள்ளி, மாணவர்களை பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வைக்கிறது. இது மாணவர்களிடையே விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கு ஊக்கமளிக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் திறமையாக இருந்தால் போதாது. உணர்வு ரீதியாகவும் திறமையாக இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இதற்கு ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேசமயம், மாணவர்களும் தங்களது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

முன்னதாக, தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “மாணவர்கள் விளையாட்டில் ஊக்குவிக்கப்பட வேண்டும். வகுப்பறைக்கு வெளியேயும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை நினைவு கூர விரும்புகிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான உணர்விற்கு ஐதராபாத் பப்ளிக் பள்ளி உரிய முக்கியத்துவம் அளிக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தனாசாரி அனசுயா, கல்வித்துறை செயலாளர் புர்ரா வெங்கடேசன், ஐதராபாத் பப்ளிக் பள்ளி சொசைட்டி தலைவர் குஸ்தி ஜெ நோரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல, பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Droupadi MurmuPresidentTelanganaHyderabad Public School
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடலுக்கு சம்மட்டி அடி – நாராயணன் திருப்பதி கருத்து!

Next Post

ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர் போல் முதல்வர் ஸ்டாலின்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies