மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!
Jan 13, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!

மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இதையடுத்து, இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் பப்ளிக் பள்ளியின் நூற்றாண்டு விழா கலந்துகொண்டார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, “மைக்ரோசாப்ட் சி.இ.ஐ. சத்யா நாதெல்லா போன்ற சிறந்த முன்னாள் மாணவர்களை உருவாக்கியதற்காக ஐதராபாத் பப்ளிக் பள்ளியை பாராட்டுகிறேன்.

ஐதராபாத் பப்ளிக் பள்ளி, மாணவர்களை பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வைக்கிறது. இது மாணவர்களிடையே விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கு ஊக்கமளிக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் திறமையாக இருந்தால் போதாது. உணர்வு ரீதியாகவும் திறமையாக இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இதற்கு ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேசமயம், மாணவர்களும் தங்களது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

முன்னதாக, தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “மாணவர்கள் விளையாட்டில் ஊக்குவிக்கப்பட வேண்டும். வகுப்பறைக்கு வெளியேயும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை நினைவு கூர விரும்புகிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான உணர்விற்கு ஐதராபாத் பப்ளிக் பள்ளி உரிய முக்கியத்துவம் அளிக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தனாசாரி அனசுயா, கல்வித்துறை செயலாளர் புர்ரா வெங்கடேசன், ஐதராபாத் பப்ளிக் பள்ளி சொசைட்டி தலைவர் குஸ்தி ஜெ நோரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல, பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Droupadi MurmuPresidentTelanganaHyderabad Public School
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடலுக்கு சம்மட்டி அடி – நாராயணன் திருப்பதி கருத்து!

Next Post

ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர் போல் முதல்வர் ஸ்டாலின்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies