தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!
Jan 14, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த விரக்தியில், பிரதமர் மோடியை எதிர்கட்சியினர் அவமதித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. மிசோராமில் மாநில கட்சியான சோரம் மக்கள் இயக்கம் வெற்றிபெற்றது.

அதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்திருக்கிறது. இது இண்டி கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. இதனால், எந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என்று எதிர்கட்சிகள் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியது.

இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை வைத்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம்சாட்டின. இதனால், இரு அவைகளிலும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்திவாறும், பிரதமர் மோடியின் போட்டோவை வைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை அவமதித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரஹலாத் ஜோஷி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் எதிர்கட்சியினர் விரக்தியடைந்து இருக்கின்றனர்.

இது எதிர்கட்சியினரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மோசமான முகமூடியை அணிந்து பிரதமர் மோடியை அவமதிப்பு செய்கின்றனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை பயன்படுத்துகின்றனர்.

எதிர்கட்சியினரின் இந்த செயல்களை ஒட்டுமொத்த அவையும் கண்டித்திருக்கிறது. பிரதமரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Opposition membersfrustratedInsulting PM ModiPrahalad Joshi
ShareTweetSendShare
Previous Post

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

Next Post

அக்டோபர் வரை 72 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருகை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies