தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!
Oct 26, 2025, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த விரக்தியில், பிரதமர் மோடியை எதிர்கட்சியினர் அவமதித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. மிசோராமில் மாநில கட்சியான சோரம் மக்கள் இயக்கம் வெற்றிபெற்றது.

அதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்திருக்கிறது. இது இண்டி கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. இதனால், எந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என்று எதிர்கட்சிகள் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியது.

இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை வைத்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம்சாட்டின. இதனால், இரு அவைகளிலும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்திவாறும், பிரதமர் மோடியின் போட்டோவை வைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை அவமதித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரஹலாத் ஜோஷி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் எதிர்கட்சியினர் விரக்தியடைந்து இருக்கின்றனர்.

இது எதிர்கட்சியினரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மோசமான முகமூடியை அணிந்து பிரதமர் மோடியை அவமதிப்பு செய்கின்றனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை பயன்படுத்துகின்றனர்.

எதிர்கட்சியினரின் இந்த செயல்களை ஒட்டுமொத்த அவையும் கண்டித்திருக்கிறது. பிரதமரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Opposition membersfrustratedInsulting PM ModiPrahalad Joshi
ShareTweetSendShare
Previous Post

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

Next Post

அக்டோபர் வரை 72 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருகை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies