தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 06:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த விரக்தியில், பிரதமர் மோடியை எதிர்கட்சியினர் அவமதித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. மிசோராமில் மாநில கட்சியான சோரம் மக்கள் இயக்கம் வெற்றிபெற்றது.

அதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்திருக்கிறது. இது இண்டி கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. இதனால், எந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என்று எதிர்கட்சிகள் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியது.

இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை வைத்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம்சாட்டின. இதனால், இரு அவைகளிலும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்திவாறும், பிரதமர் மோடியின் போட்டோவை வைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை அவமதித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரஹலாத் ஜோஷி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் எதிர்கட்சியினர் விரக்தியடைந்து இருக்கின்றனர்.

இது எதிர்கட்சியினரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மோசமான முகமூடியை அணிந்து பிரதமர் மோடியை அவமதிப்பு செய்கின்றனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை பயன்படுத்துகின்றனர்.

எதிர்கட்சியினரின் இந்த செயல்களை ஒட்டுமொத்த அவையும் கண்டித்திருக்கிறது. பிரதமரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Opposition membersfrustratedInsulting PM ModiPrahalad Joshi
Share
Tweet
SendShare
Previous Post

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

Next Post

அக்டோபர் வரை 72 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருகை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies