ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Jan 14, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனால், அவர் தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார்.

இந்த சூழலில், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், அதிபர் பதவியில் தோல்வியுற்ற பின்னர் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப், முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்கண்ட போராட்டத்தில் டொனால்டு ட்ரம்ப்புக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

மேலும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குச்சீட்டிலும் ட்ரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது. அப்படியே இடம் பெற்றாலும் அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் செல்லாது என்று தெரிவித்திருக்கிறது. எனினும், அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடை விதிக்கப்படவில்லை. மேலும், இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வரை தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Tags: courtamericaFormer PresidentDonald Trump
ShareTweetSendShare
Previous Post

ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம்!

Next Post

வெள்ளம் பாதித்த பகுதிகள்! – இந்திய கடலோர காவல்படை மீட்பு பணிகளில் தீவிரம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies