சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: அமைச்சர் பொன்முடி பதவி தப்புமா?
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: அமைச்சர் பொன்முடி பதவி தப்புமா?

திக்... திக்... மனநிலையில் தி.மு.க.வினர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வினர் திக்… திக்… மனநிலையில் இருந்து வருகின்றனர். மேலும், இத்தீர்ப்பு தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் க.பொன்முடி, கடந்த 2006 – 11 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 27-ம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் மேலோட்டமாக விசாரித்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்திருக்கிறார்கள்.

ஆகவே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன. ஆனால், அவர்களது வருமானத்தை தனித்தனியாக பிரித்துப் பார்த்து, வருமானவரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு.

எனவே, அந்தத் தீர்ப்பை ரத்து செய்கிறேன். இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கிறேன். இதுகுறித்த தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக பொன்முடியும், அவரது மனைவியும் டிசம்பர் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவே ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதையடுத்து, பொன்முடி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். இதனால், சென்னை உயர் நீதிமன்ற வளாகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. தீர்ப்பில் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம். ஆகவே, இத்தீரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: tamilnaduPonmudiMinisterCaseJudgement
ShareTweetSendShare
Previous Post

குவைத் புதிய மன்னருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.51 அடியாக அதிகரிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies