அயோத்தியில் தமிழிலும் அறிவிப்பு பலகைகள்!
Jun 6, 2025, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் தமிழிலும் அறிவிப்பு பலகைகள்!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் வைக்கப்படும் மூலவர் ஸ்ரீராமர் சிலை, ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதையொட்டி, அனைத்து சங்கராச்சாரியார்களுக்கும், மகாமண்டலேசுவரர்களுக்கும், சீக்கிய மற்றும் பௌத்த சமூகங்களின் உயர்மட்ட ஆன்மீகத் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆகவே, நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் அயோத்திக்கு வரவிருக்கிறார்கள்.

ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய ராம் லல்லா சிலைகளை கணேஷ் பட், அருண் யோகிராஜ் மற்றும் சத்யநாராயண் பாண்டே ஆகிய 3 சிற்பிகள் உருவாக்கி வருகின்றனர். இந்த மூன்றில் 5 வயது குழந்தையின் மென்மையை உயிர்ப்பிக்கும் ஸ்ரீராமர் சிலை தேர்ந்தெடுக்கப்படுகிறது.

தொடர்ந்து, கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16 முதல் தொடங்கும். காசியிலிருந்து கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மற்றும் லக்ஷ்மிகாந்த் தீட்சித் ஆகியோர் பிரதிஷ்டை பூஜையை நடத்துகிறார்கள். கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, விஸ்வபிரசன் தீர்த் தலைமையில் 48 நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

இந்த நிலையில், அயோத்தியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக லக்னெள மண்டல காவல்துறை இணை இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவின்போது, அயோத்தியில் பக்தர்கள் பெருமளவு சாலைகளில் பாதயாத்திரையாக வருவார்கள் என்பதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். சில சாலைகளில் ஆட்டோக்களுக்கும் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வரவிருப்பதால், அவர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு இடங்களில் வழிகாட்டிப் பலகைகளும், அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட உள்ளன. ஹிந்தி, ஆங்கில மொழிகளுடன் நாட்டில் அதிகமாக பேசக்கூடிய தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Tags: policetrafficRam TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! – அண்ணாமலை

Next Post

டெல்லி – அயோத்தி விமான சேவை!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies