திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் - மத்திய அமைச்சர் அமைச்சர் அனுராக் தாகூர் கடும் தாக்கு!
Jun 28, 2025, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் – மத்திய அமைச்சர் அமைச்சர் அனுராக் தாகூர் கடும் தாக்கு!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் மட்டுமே என மத்திய அமைச்சர் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இலட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இளைஞர் விவகாரம், தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், வணக்கம் என்று தமிழில் சொல்லி பேச்சை தொடங்கினார்.

வேறுபட்ட மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா உதவும். இதில், 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். 1.4 பில்லியன் இந்தியர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 30 லட்சம் பேர் MY BHARATH ஆன்லைன் போர்டலில் இணைந்து உள்ளனர். ஒரு கோடி பேரை சேர்ப்பது தான் இலக்கு.

2014 -ல் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தான் இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. 2014 -ல் 362 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது 700 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் இருந்த நெடுஞ்சாலை தற்போது 2 லட்சத்திற்கு மேல் உள்ளது. 45 கோடி வங்கி கணக்குகள் தற்போது உள்ளன. நாடு அனைத்து துறைகளிலும் மேம்பட்டு செயல்படுகிறது. இளைஞர்களாக உள்ள நீங்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.

2014 இல் 500 க்கும் குறைந்த start up தான் இருந்தன. இப்போது மூன்றாவது பெரிய start up நாடாக உள்ளது.பொருளாதாரத்தில் வேகமாக வளருகிறது இந்திய நாடு.

ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் இலவச தானியங்கள் கிடைக்கின்றன. 42% டிஜிட்டல் பேமெண்ட்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன.

பொருளாதார உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக உள்கட்டமைப்பிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த இரண்டையும் ஒருசேர முன்னேற்றுவதன் மூலமாகவே உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது பிரதமரின் நம்பிக்கை.

மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சத்தை எட்டியுள்ளது.

2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

பின்னர், மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, முதல்முறையாக ஆசிய மற்றும் பாரா ஆசிய போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழ்நாடு நடைபெற உள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை எப்படி மக்கள் இயக்கமாக மாற்றி 2047 இல் இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 2 கோடி பயனாளிகள் தங்கள் அனுபவம் குறித்து பகிர்ந்து உள்ளனர். 15 கோடி மக்களுக்கு மேல் இந்த யாத்ரா மூலம் பயனடைவார்கள் என்றவர்.

நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவத்தில், பொய்யான கதைகளை பரப்புவதில் தான் முழு கவனத்துடன் உள்ளனர். பாராளுமன்ற நிகழ்வில் எதிர்கட்சி எம்பிக்கள் நடந்து கொண்டது அசிங்கமாக உள்ளது, வீடியோக்கள் எடுத்து ஒளிபரப்பினர். மிமிக்கிரி செய்தது எல்லாம் முதல் முறையல்ல, ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் விவகாரத்தை பொறுத்தவரை, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, முடிவுகளை நீதிமன்றம் தான் எடுக்கும், யாரும் தலையிட முடியாது, அந்த அகாடெமிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்றார்.

பின்னர் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியவர், தமிழகத்தில், மீண்டும் ஒரு திமுக அமைச்சர் ஊழல் வழக்கில் கைதாகி உள்ளார். திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல். சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்தியாவை வடக்கு தெற்கு பிரிக்க முயல்கிறார்கள். வஞ்சகத்தை விளைவிக்கிறார்கள் இது நாட்டுக்கு நல்லதல்ல என்றார்.

Tags: ChennaiAnurag Thakur Press Meet
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

பொங்கல் போட்டியிலிருந்து விலகும் ‘லால் சலாம்’ – காரணம் தனுஷ்?

Related News

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!

அருப்புக்கோட்டை அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு வழங்கப்பட்ட இயந்திர யானை!

ஆத்தூர் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்!

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரு ஆண்டுகளாக திறக்கப்படாத இ.டாய்லெட்!

ஆண்டிபட்டி அருகே மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்ட விவசாயிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு ஹாக்கி ஆண்கள்!

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா!

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி – நயினார் நாகேந்திரன் உறுதி!

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் – கூட்ட நெரிசலில் 600-க்கும் மேற்பட்டோர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies