பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுதில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இரண்டாவது நாளாகத் நடைபெற்றது.
புதுதில்லியில் உள்ள பாஜக கட்சித் தலைமையகத்தில் தேசிய நிர்வாகிகள் கூட்டம், இரண்டாவது நாளாகத் நேற்று நடைப்பெற்றது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்தும், கட்சியில் வரவிருக்கும் திட்டங்களுக்கான வியூகங்களை வகுப்பதற்கும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மக்களுடனான பாஜகவின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை விரிவாக விளக்குவது குறித்து அவர்களுடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்டம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பாஜகவின் இதர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.