வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Mar 15, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அதீத கனமழை பெய்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அருவி போல் கொட்டிய கனமழையால், வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் கடும் சேதம் அடைந்தது. மக்கள் சொல்லென்னாத்துயரம் அடைந்தனர்.

வெள்ள பாதிப்பை உணர்ந்த சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் படகுகளை உடனே ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுக் கொண்டு வந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை, தூய குடிநீர் உள்ளிட்ட 21 வகையான அத்தியாவசியப் பொருட்கள் கடந்த பல நாட்களாக இரவு – பகலாக வழங்கி வருகின்றனர். அடுத்த கட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கான தேவைகளை உடனுக்கு உடன் பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக, மழை வெள்ளம் வடியாத பகுதிகளுக்கு உணவு கொண்டு சேர்த்தல், குடிநீர் வாகனம் மூலம் தூய குடிநீர் வழங்குதல், படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரித்து, அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கிடைக்கும்படி செய்தல், மேலும், ஆம்புன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் என மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு துரிதமாக செயல்பட்டனர்.

பொதுவாக நமக்கு துயரம் வரும்போது, கடவுள் யாராவது ஒருவர் ரூபத்தில் வந்து உதவி செய்வார் என்று கிராமங்களில் இன்றும் சொல்வது உண்டு. அதுபோலவே, மக்கள் துயரத்தில் பங்கு கொண்ட சேவா பாரதி தென்தமிழ்நாடு, மக்கள் துயரத்தையும், கண்ணீரையும் துடைத்தெறிந்தனர்.

உங்களுக்கு நன்றியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பொது மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கரங்களைப் பிடித்து, தங்களது கண்களில் ஒற்றிக் கொண்டு, அன்பை வெளிப்படுத்தினர்.

Tags: rss seva bharathi tamilnadu
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Next Post

நகைச்சுவை நடிகர் ‘போண்டா மணி’ காலமானார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies