விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!
Sep 9, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ம் ஆண்டு விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும். இதற்கு, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து, நகரிலுள்ள சாய் (SAI) விளையாட்டு மையத்திற்குச் சென்ற அமைச்சர், சாதகமான வானிலை மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பைக் காரணம் காட்டி, பெங்களூரு இந்தியாவின் விளையாட்டு மையமாக மாறும் என்று எண்ணுவதாகத் தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட், கால்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பெங்களூரு வீரர்கள் ஆர்வம் காட்டி வருவதை பாராட்டினார். அதேபோல, அகாடமிகளை முன்கூட்டியே நிறுவியதற்காகவும், விளையாட்டுகளில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு பங்களிப்பதற்காகவும் மூத்த விளையாட்டு வீரர்களை பாராட்டினார்.

பின்னர், பெங்களூருவில் உள்ள தன்ராஜ் பிள்ளை, அர்ஜுன் ஹல்லப்பா போன்ற மூத்த விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் லக்ஷ்யம் அகாடமியை பார்வையிட்டார். அப்போது, இருவரின் முயற்சியைப் பாராட்டியதுடன், நாட்டின் விளையாட்டுத் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற வசதிகளைக் கொண்டு வருமாறு மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இவர்களது சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சிறப்பான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டும்.

2047-ல் இந்தியாவை விளையாட்டில் சூப்பர் பாரதமாக மாற்ற வேண்டும். அனைத்து அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும். மேலும், இளைஞர்களை விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் திறமையான இளைஞர்களின் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் வெளியிடலாம். அத்தகைய திறமைசாலிகள் மீது அரசு தனி கவனம் செலுத்தும். நட்சத்திர வீரர்கள் வாரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்றார்.

Tags: BengaluruAnurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!

Next Post

தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!

Related News

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies