விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ம் ஆண்டு விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும். இதற்கு, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து, நகரிலுள்ள சாய் (SAI) விளையாட்டு மையத்திற்குச் சென்ற அமைச்சர், சாதகமான வானிலை மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பைக் காரணம் காட்டி, பெங்களூரு இந்தியாவின் விளையாட்டு மையமாக மாறும் என்று எண்ணுவதாகத் தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட், கால்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பெங்களூரு வீரர்கள் ஆர்வம் காட்டி வருவதை பாராட்டினார். அதேபோல, அகாடமிகளை முன்கூட்டியே நிறுவியதற்காகவும், விளையாட்டுகளில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு பங்களிப்பதற்காகவும் மூத்த விளையாட்டு வீரர்களை பாராட்டினார்.

பின்னர், பெங்களூருவில் உள்ள தன்ராஜ் பிள்ளை, அர்ஜுன் ஹல்லப்பா போன்ற மூத்த விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் லக்ஷ்யம் அகாடமியை பார்வையிட்டார். அப்போது, இருவரின் முயற்சியைப் பாராட்டியதுடன், நாட்டின் விளையாட்டுத் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற வசதிகளைக் கொண்டு வருமாறு மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இவர்களது சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சிறப்பான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டும்.

2047-ல் இந்தியாவை விளையாட்டில் சூப்பர் பாரதமாக மாற்ற வேண்டும். அனைத்து அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும். மேலும், இளைஞர்களை விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் திறமையான இளைஞர்களின் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் வெளியிடலாம். அத்தகைய திறமைசாலிகள் மீது அரசு தனி கவனம் செலுத்தும். நட்சத்திர வீரர்கள் வாரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்றார்.

Tags: BengaluruAnurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!

Next Post

தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies