விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!
Jul 30, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ம் ஆண்டு விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும். இதற்கு, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து, நகரிலுள்ள சாய் (SAI) விளையாட்டு மையத்திற்குச் சென்ற அமைச்சர், சாதகமான வானிலை மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பைக் காரணம் காட்டி, பெங்களூரு இந்தியாவின் விளையாட்டு மையமாக மாறும் என்று எண்ணுவதாகத் தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட், கால்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பெங்களூரு வீரர்கள் ஆர்வம் காட்டி வருவதை பாராட்டினார். அதேபோல, அகாடமிகளை முன்கூட்டியே நிறுவியதற்காகவும், விளையாட்டுகளில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு பங்களிப்பதற்காகவும் மூத்த விளையாட்டு வீரர்களை பாராட்டினார்.

பின்னர், பெங்களூருவில் உள்ள தன்ராஜ் பிள்ளை, அர்ஜுன் ஹல்லப்பா போன்ற மூத்த விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் லக்ஷ்யம் அகாடமியை பார்வையிட்டார். அப்போது, இருவரின் முயற்சியைப் பாராட்டியதுடன், நாட்டின் விளையாட்டுத் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற வசதிகளைக் கொண்டு வருமாறு மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இவர்களது சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சிறப்பான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டும்.

2047-ல் இந்தியாவை விளையாட்டில் சூப்பர் பாரதமாக மாற்ற வேண்டும். அனைத்து அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும். மேலும், இளைஞர்களை விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் திறமையான இளைஞர்களின் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் வெளியிடலாம். அத்தகைய திறமைசாலிகள் மீது அரசு தனி கவனம் செலுத்தும். நட்சத்திர வீரர்கள் வாரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்றார்.

Tags: BengaluruAnurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!

Next Post

தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies