பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸில் 303 இந்தியப் பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடா்பாக பிரான்ஸ் நாட்டின் ‘லி மோண்ட்’ நாளிதழில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு ஒரு விமானம் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விமானத்தில் 21 மாதக் குழந்தை முதல் 17 வயது சிறுவர்கள் வரை 13 பேர் உட்பட மொத்தம் 303 இந்திய பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக, கடந்த 21-ம் தேதி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக பிரெஞ்ச் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, மேற்கண்ட விமானம் நிகரகுவா புறப்படுவதற்கு பிரெஞ்ச் அதிகாரிகள் தடை விதித்தனர்.

மேலும், அந்த விமான நிலையத்துக்கும் அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது. அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைத்துப் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் விசாரணைக்காக இருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பிரான்ஸ் குற்றப் பிரிவு, எல்லை காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறையையொட்டி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நோக்கில், இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பயணிகளின் நலன் உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: FranceIndian PassengersEmbasy help
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – திமுக ஷாக்!

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies