பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!
Sep 10, 2025, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸில் 303 இந்தியப் பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடா்பாக பிரான்ஸ் நாட்டின் ‘லி மோண்ட்’ நாளிதழில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு ஒரு விமானம் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விமானத்தில் 21 மாதக் குழந்தை முதல் 17 வயது சிறுவர்கள் வரை 13 பேர் உட்பட மொத்தம் 303 இந்திய பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக, கடந்த 21-ம் தேதி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக பிரெஞ்ச் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, மேற்கண்ட விமானம் நிகரகுவா புறப்படுவதற்கு பிரெஞ்ச் அதிகாரிகள் தடை விதித்தனர்.

மேலும், அந்த விமான நிலையத்துக்கும் அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது. அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைத்துப் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் விசாரணைக்காக இருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பிரான்ஸ் குற்றப் பிரிவு, எல்லை காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறையையொட்டி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நோக்கில், இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பயணிகளின் நலன் உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: FranceIndian PassengersEmbasy help
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – திமுக ஷாக்!

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies