பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!
Jul 30, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸில் 303 இந்தியப் பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடா்பாக பிரான்ஸ் நாட்டின் ‘லி மோண்ட்’ நாளிதழில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு ஒரு விமானம் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விமானத்தில் 21 மாதக் குழந்தை முதல் 17 வயது சிறுவர்கள் வரை 13 பேர் உட்பட மொத்தம் 303 இந்திய பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக, கடந்த 21-ம் தேதி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக பிரெஞ்ச் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, மேற்கண்ட விமானம் நிகரகுவா புறப்படுவதற்கு பிரெஞ்ச் அதிகாரிகள் தடை விதித்தனர்.

மேலும், அந்த விமான நிலையத்துக்கும் அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது. அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைத்துப் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் விசாரணைக்காக இருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பிரான்ஸ் குற்றப் பிரிவு, எல்லை காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறையையொட்டி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நோக்கில், இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பயணிகளின் நலன் உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: FranceIndian PassengersEmbasy help
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – திமுக ஷாக்!

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies