பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!
Jun 15, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸில் 303 இந்தியப் பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடா்பாக பிரான்ஸ் நாட்டின் ‘லி மோண்ட்’ நாளிதழில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு ஒரு விமானம் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விமானத்தில் 21 மாதக் குழந்தை முதல் 17 வயது சிறுவர்கள் வரை 13 பேர் உட்பட மொத்தம் 303 இந்திய பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக, கடந்த 21-ம் தேதி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக பிரெஞ்ச் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, மேற்கண்ட விமானம் நிகரகுவா புறப்படுவதற்கு பிரெஞ்ச் அதிகாரிகள் தடை விதித்தனர்.

மேலும், அந்த விமான நிலையத்துக்கும் அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது. அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைத்துப் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் விசாரணைக்காக இருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பிரான்ஸ் குற்றப் பிரிவு, எல்லை காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறையையொட்டி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நோக்கில், இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பயணிகளின் நலன் உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: FranceIndian PassengersEmbasy help
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – திமுக ஷாக்!

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies