60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு சென்றார். காலையில் தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பயனடைந்த மக்களுடன் அமித்ஷா உரையாடினார்.

அப்போது அவர், “தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இதில், விண்வெளி மற்றும் இராணுவமும் அடக்கம். விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

அதேபோல, மறுபுறம் ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டிருக்கிறார். கொரோனா வந்தபோது இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து அனைவரும் கவலைப்பட்டனர்.

ஆனால், இந்த தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாகப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

பின்னர், தனது சொந்தத் தொகுதியான காந்திநகர் மாவட்டம் கலோலில் உள்ள பன்சார் ஏரியைத் திறந்து வைத்ததோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலோல் – கத்ராஜ் சாலையில் சர்தார் வல்லபாய் படேலின் 15 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.

மேலும், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி இரயில்வே மைதானத்தில் விளையாட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குஜராத் சாகித்ய மஹோத்சவையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Tags: Amit shaGujratInteractsbeneficiariesPM Svanidhi Yojana
ShareTweetSendShare
Previous Post

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

Next Post

சிஎஸ்கே அணியில் இணைந்தது தன் மகளுக்கு பரிசளித்ததாக உணர்கிறேன் – டேரில் மிட்செல் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies