60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!
Jul 25, 2025, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு சென்றார். காலையில் தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பயனடைந்த மக்களுடன் அமித்ஷா உரையாடினார்.

அப்போது அவர், “தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இதில், விண்வெளி மற்றும் இராணுவமும் அடக்கம். விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

அதேபோல, மறுபுறம் ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டிருக்கிறார். கொரோனா வந்தபோது இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து அனைவரும் கவலைப்பட்டனர்.

ஆனால், இந்த தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாகப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

பின்னர், தனது சொந்தத் தொகுதியான காந்திநகர் மாவட்டம் கலோலில் உள்ள பன்சார் ஏரியைத் திறந்து வைத்ததோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலோல் – கத்ராஜ் சாலையில் சர்தார் வல்லபாய் படேலின் 15 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.

மேலும், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி இரயில்வே மைதானத்தில் விளையாட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குஜராத் சாகித்ய மஹோத்சவையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Tags: GujratInteractsbeneficiariesPM Svanidhi YojanaAmit sha
ShareTweetSendShare
Previous Post

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

Next Post

சிஎஸ்கே அணியில் இணைந்தது தன் மகளுக்கு பரிசளித்ததாக உணர்கிறேன் – டேரில் மிட்செல் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies