60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு சென்றார். காலையில் தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பயனடைந்த மக்களுடன் அமித்ஷா உரையாடினார்.

அப்போது அவர், “தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இதில், விண்வெளி மற்றும் இராணுவமும் அடக்கம். விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

அதேபோல, மறுபுறம் ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டிருக்கிறார். கொரோனா வந்தபோது இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து அனைவரும் கவலைப்பட்டனர்.

ஆனால், இந்த தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாகப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

பின்னர், தனது சொந்தத் தொகுதியான காந்திநகர் மாவட்டம் கலோலில் உள்ள பன்சார் ஏரியைத் திறந்து வைத்ததோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலோல் – கத்ராஜ் சாலையில் சர்தார் வல்லபாய் படேலின் 15 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.

மேலும், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி இரயில்வே மைதானத்தில் விளையாட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குஜராத் சாகித்ய மஹோத்சவையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Tags: Amit shaGujratInteractsbeneficiariesPM Svanidhi Yojana
Share
Tweet
SendShare
Previous Post

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

Next Post

சிஎஸ்கே அணியில் இணைந்தது தன் மகளுக்கு பரிசளித்ததாக உணர்கிறேன் – டேரில் மிட்செல் !

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies