60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!
Jun 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு சென்றார். காலையில் தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பயனடைந்த மக்களுடன் அமித்ஷா உரையாடினார்.

அப்போது அவர், “தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இதில், விண்வெளி மற்றும் இராணுவமும் அடக்கம். விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

அதேபோல, மறுபுறம் ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டிருக்கிறார். கொரோனா வந்தபோது இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து அனைவரும் கவலைப்பட்டனர்.

ஆனால், இந்த தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாகப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

பின்னர், தனது சொந்தத் தொகுதியான காந்திநகர் மாவட்டம் கலோலில் உள்ள பன்சார் ஏரியைத் திறந்து வைத்ததோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலோல் – கத்ராஜ் சாலையில் சர்தார் வல்லபாய் படேலின் 15 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.

மேலும், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி இரயில்வே மைதானத்தில் விளையாட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குஜராத் சாகித்ய மஹோத்சவையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Tags: Amit shaGujratInteractsbeneficiariesPM Svanidhi Yojana
ShareTweetSendShare
Previous Post

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

Next Post

சிஎஸ்கே அணியில் இணைந்தது தன் மகளுக்கு பரிசளித்ததாக உணர்கிறேன் – டேரில் மிட்செல் !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies