மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையில் அடங்கி இருக்கிறது: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையில் அடங்கி இருக்கிறது: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையின் வசனங்களில் அடங்கி இருக்கிறது. 1 லட்சம் பேர் கீதையை பாராயணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

அகில பாரதிய சமஸ்கிருத பரிஷத் மற்றும் மோதிலால் பாரத தீர்த்த சேவா மிஷன் மற்றும் சனாதன் சமஸ்கிருதி மஞ்ச் ஆகியவை இணைந்து, 1லட்சம் பேர் இணைந்து கீதை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடத்தின. இந்த நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் கலந்துகொண்டு கீதையை பாராயணம் செய்தனர். இது ஒரு கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் மைதானத்தில் ‘லோக்கோ காந்தே கீதா பாதை’ பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. 1 லட்சம் பேர் கீதையை பாராயணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

நமது கலாச்சார பாரம்பரியம் என்பது உயர்ந்த மரபுகள், ஆழ்ந்த அறிவு மற்றும் தத்துவ, ஆன்மீக ஞானம் ஆகியவற்றின் கலவையாகும். உள்ளடக்கம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவை நமது உள்ளார்ந்த பலம். மஹாபந்த் காலத்திலிருந்து நமது சுதந்திர இயக்கம் வரை, அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இன்று வரை ஸ்ரீமத் பகவத் கீதை தொடர்கிறது.

ஸ்ரீமத் பகவத் கீதை ஒரு நடைமுறை வழிகாட்டியாகும், இது மகத்தான ஞானத்தை அளிக்கிறது மற்றும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கான பாதையை வழங்குகிறது. இது வாழ்க்கையின் சவால்களை கடந்து செல்ல ஒரு கையேடாகவும் செயல்படுகிறது. கீதை வழங்கும் கலாச்சாரப் பாதைகளின் பன்மைத்தன்மை இந்திய சிந்தனைக்கு மிகவும் முக்கியமானது.

ஞானம், பக்தி, கர்மா அல்லது வேறு எந்த பாதையாக இருந்தாலும் சரி, கீதையானது முன்னேற்றத்தை அடைய பல வேறுபட்ட, ஆனால் இறுதியில் இணைக்கப்பட்ட பாதைகளை வழங்குகிறது. இத்தகைய போதனைகள் நேரம் மற்றும் இடத்தின் எல்லைகளை கடந்து, உலகின் உண்மையான தன்மை, ஒருவரின் சொந்த சுயம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.

பல்வேறு தரப்பு மக்கள் ஒன்று கூடி ஸ்ரீமத் பகவத் கீதையை பாராயணம் செய்வது சமூக நல்லிணக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஆற்றலையும் புகுத்தும். இதை ஏற்பாடு செய்த அகில பாரதிய சமஸ்கிருத பரிஷத் மற்றும் மோதிலால் பாரத தீர்த்த சேவா மிஷன் மற்றும் சனாதன் சமஸ்கிருதி மஞ்ச் ஆகியவற்றுக்கு பாராட்டுக்கள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், நாட்டு மக்களுக்கு கீதா ஜெயந்தி வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த தனது எக்ஸ் பதிவில், “மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையின் வசனங்களில் அடங்கி இருக்கிறது. இது எப்போதும் செயல் பாதையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘கீதா ஜெயந்தி’ நல்வாழ்த்துக்கள். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா!” என்று தெரிவித்திருக்கிறார்.

गीता के श्लोकों में मानवता का हर मर्म समाहित है, जो सदैव कर्म पथ पर आगे बढ़ने के लिए प्रेरित करता है।'गीता जयंती' की मेरे सभी परिवारजनों को कोटि-कोटि शुभकामनाएं। जय श्री कृष्ण!

— Narendra Modi (@narendramodi) December 23, 2023

 

Tags: PM ModiKolkataGita recitationLauds
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் தேர்தல் : பெண் ஊடகவியலாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Next Post

மும்பையில் செட்டிலாக போகும் தமிழ் இயக்குநர்!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies