சபரிமலை பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர் 17ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெருவழி பாதையில் அதிக அளவில் பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர்.எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை, வலியான வட்டம் வழியாக பம்பை வரும் பக்தர்கள் பின்னர் சன்னிதானத்தை அடைவார்கள்.
மகரவிளக்கு காலத்தில் இந்த வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெருவழிப்பாதையில் பத்கதர்கள் செல்லும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அழுதையிலிருந்து காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு மதியம் 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மாலை 4:30 வரை பக்தர்கள் செல்லலாம். இதற்கு முன்னர் இது 3:00 மணியாக இருந்தது. பெருவழிப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய்துள்ளது.