திராவிடம் பொய்! பெரியார் பொய்! கருணாநிதி பொய்! ஸ்டாலின் பொய்! உதயநிதி பொய்! அரசு விழாக்களில் பொய்! முரசொலி பொய்! எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
”மழையில் பாதிப்படைந்தவர்களுக்கு 6000 ரூபாய் தருவதாக சொன்னேன் சொல்லிய இரண்டே நாளில் தந்துவிட்டேன்” ”எவ்வளவோ இன்னல்கள் இருந்தாலும் மக்கள் எங்களை இன்முகத்தோடு வரவேற்றனர்” “ஒன்றிய அரசு தரவேண்டும் என காத்திராமல் கொடுத்தோம்” – என்றெல்லாம் கிருஷ்துமஸ் விழாவில், பஞ்சாயத்து அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பொய் உரையை துண்டுச்சீட்டை பார்த்து படித்தார்!
சென்னை மழைக்காக மத்திய அரசு வழங்கிய 450+450+561.29 கோடியில் நான்கில் ஒருபங்கினை செலவு செய்து 6000 ரூபாயை கொடுத்துவிட்டு, “சொன்னேன் செய்தேன்” என எப்படி பொய்யை துணிந்து சொல்கிறார் பாருங்கள்! “மத்திய அரசு தந்தது, அதை மக்களுக்கு வழங்கினோம்! நாங்களும் மாநில கஜானாவில் இருந்து இத்தனை ரூபாயை எடுத்து கொடுத்தோம்”- என்றல்லவா சொல்லவேடும்! கிருஷ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேசியதெல்லாம் பச்சை பொய்!
நிவாரணப் பணம் 2015 திலேயே வங்கியில்தான் செலுத்தப்பட்டது! அப்போதே கூட பிரதமரின் ஜந்தன் வங்கிக்கணக்குகள் மக்களிடம் இருந்தது! இப்போது இன்னும் அதிகமாக ஒரு வீட்டுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கின்றன! ஏன் மக்கள் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டபடி வங்கியில் செலுத்தாமல் கையில் தருகிறார்கள்?
சென்னையில் மட்டும் ஏறத்தாள 5 லட்சம் ரேசன் போலி முகவரிகள் இருக்கின்றன, ஆனால் கார்டு இருக்காது! அல்லது ஒருவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் இருக்கும், பணம் ஒரு நபருக்கு ஒரு கார்டுக்குத்தான் வழங்குவார்கள்! மொத்தத்தில் 5 லட்சம் நபர்களுக்கு ரூபாய் 6000 தந்ததாக பணம் களித்துக்கொள்ளப்படும், ஆனால் அது மக்களிடம் போய் சேராது! இதற்காகத்தான் எவ்வளவோ சொல்லியும் வங்கியில் செலுத்தாமல் கையில் தருகிறார்கள்! இதுதான் திமுகவின் விஞ்ஞான ஊழல்! (இந்த வகையில் மிச்சப்படுத்தப்படும் அரிசிதான் லாரிகளில் கடத்தப்படுகிறது!)
”பாதகம் செய்வோரின் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்று பாரதி சொன்னான்! வெள்ளப்பாதிப்பை பார்வையிட வராமல் இருந்துவிட்டு, தேவையில்லாமல் தகவல் தொடர்பையும் துண்டித்துவிட்டு, மக்களை பரிதவிக்கவிட்டுவிட்டு, மக்களெல்லாம் சினம் கொண்டு, பாரதி சொன்னதை செய்தபின்பு வந்து போட்டோ சூட்டிங் செய்துவிட்டு கிழம்பிய ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் எந்த முகத்தோடு மக்களிடம் கிருஷ்துமஸ் விழாவில் பொய் பேசுகிறார்கள்?
4000 கோடி சென்னை மழைநீர் வடிகால்வாய் பணிக்காக செலவு செய்யப்பட்டுவிட்டது என மேயரும் அமைச்சர் பெருமக்களும் சொன்னார்கள்! இந்த மழையை பொறுத்தமட்டில் ஒரு சொட்டு தன்ணீர்கூட தேங்காது! எல்லோரும் தைரியமாக இருக்கலாம்! மழையை ஜாலியாக அனுபவியுங்கள் என சொன்னது சாதாரண திமுக காரன் அல்ல, அமைச்சர்கள்!
வானிலை மையம் ஒலிபரப்பிய எச்சரிக்கைகளை மக்களிடம் தெரிவிக்காமல் “மழை எதுவும் செய்யாது, இந்த முறை தண்ணீர் வீட்டுக்குள் வராது” என்று சொல்லி, மக்களை மழைவெள்ளத்தில் ஒரு வாரகாலம் தத்தளிக்க செய்து, சிரித்து மகிழ்ந்தது திமுக! ஒரு பாட்டில் தண்ணீரைக்கூட திமுக காரன் வந்து தரவில்லை!
மழைநீர் சற்றும் வடியவில்லையே, 4000 கோடியை என்ன செய்தீர்கள்? என மக்களெல்லாம் முகத்தில் உமிழும் சூழலில் ”இல்லை இல்லை,4000 கோடியில் 98 சதவிகிதம் பணி முடியவில்லை, 42 சதவிகிதம்தான் முடிந்தது, என முகத்தை துடைத்துக் கொண்டே சொன்னார் அமைச்சர் கே.என்.நேரு! ”அப்படி என்றால் 4000 கோரியில், 98 சதவிகிதத்திற்கும் 42 சதவிகிதத்திற்கும் இடையில் உள்ள தொகை திருடப்பட்டதா?” – இது மக்களின் கேள்வி? “அந்த 42 சதவிகிதம் கூட செலவிடப்பட்டதா என சந்தேகம் இருக்கிறது, அந்த செலவு கணக்கினை ஆளும் நிர்வாகம் மக்களிடம் பகிரவேண்டும் ” – என்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்! 98 சதவிகிதம் அல்ல 42 சதவிகிதம் என பிதற்றலாக பேசிய அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ஒதுக்கியது 4000 கோடியல்ல 5100 க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டது என ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்!
நிவாரண தொகை 6000 கூட 98 சதவிகிதம் பேருக்கு கொடுக்கப்பட்டதாகத்தான் ஸ்டாலினும் கிருஷ்துமஸ் விழாவில் சொன்னார்! அந்த அமைச்சர் நேரு சொன்ன 98 சதவிகிதம் 42 சதவிகிதமாக குறைந்ததைப்போல, ஸ்டாலின் சொன்ன 98 சதவிகிதமும் 30 சதவிகிதமாக பின்னாளில் குறையக்கூடும் என திமுகவின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்!
மத்திய அரசு மழை துவங்குவதற்கும் ஒரு மாதம் முன்பாகவே எச்சரிக்கை தொகையாக 450 கோடியும் மழை பெய்த அடுத்த நாள் ராணுவ அமைச்சர் நேரில் பார்வையிட்டு, உடனேயே 450 கோடியும் சென்னை புறநகர் மழை நீய் வடிகால்வாய் சீரமைப்பு பனிக்காக 561.29 கோடியும் வழங்கியபின்பும்,
மாநில அரசு, மத்திய அரசு வழங்கிய தொகையான 900 கோடியில் மூன்றில் ஒரு மடங்கான தொகை 300 கோடியை சேர்த்து செலவு செய்ய வேண்டும் என சட்டம் இருக்கும் சூழலிலும், ஏதே 100 அல்லது 200 கோடியை மட்டும் செலவு செய்துவிட்டு, மத்திய அரசு தந்தது எதையும் சொல்லாமல் “சொன்னேன் செய்தேன்” என்கிறார் பாருங்கள் முதலமைச்சர்! எவ்வளவு பெரிய கிருஷ்துமஸ் பொய்!
மொத்தத்தில், “ 5100 கோடியில் ஒரு 4000 கோடியும், 900 கோடியில் 700 முதல் 800 கோடியும் ஸ்வாகா!”, என்றுதான் திமுகவைப்பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்! 561.29 கோடி மத்திய அரசின் நிதி, மழைநீர் வடிலால் கட்டுமான பணிக்களுக்கானது என்பதால், மழை பொழியும் காலத்தில் கட்டுமானம் நடந்ததாக சொல்லமுடியாது என்பதால் அந்த தொகையை அப்படியே வைத்திருப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது!
தென் மாவட்டங்களில் மழை வந்தபோது வானிலை அறிக்கை எச்சரிக்கை செய்தும் அதை மக்களுக்கு தெரிவிக்காமல், டெல்லிக்கு போனார் ஸ்டாலின்! வானிலை மையம் அறிவித்தபடி அதிக மழையால் தென் மாவட்டங்கள் அழிவை சந்திப்பதை பொருட்படுத்தாத ஸ்டாலின், புள்ளி வைத்த I.N.D.I கூட்டணி கூட்டத்தில் கலந்துக்கொண்டார்!
தென் மாவட்ட மக்கள், “ அரசு ஏன் எங்களை எச்சரிக்கை செய்யவில்லை?” “ஏன் நாங்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து வெளியே வர அரசு உதவ வில்லை?” ”ஏன் உணவுப்பொருள்கள் வழங்கவில்லை?” “எம்.எல்.எ எங்கே? எம்.பி எங்கே? மந்திரி எங்கே? கவுன்சிலர் எங்கே? மேயர் எங்கே?, பாஜகவினரை தவிற சேவா பாரதி போன்ற சமூக சேவை அமைப்புகளை தவிற ஆளும் கட்சியினர் யாரும் வராதது ஏன்?” என கேள்விகளை கேட்டு சாலை மறியல் செய்ததை, அரசை பார்த்து பரிதாபமாகவும் கோபமாகவும் மக்கள் கேள்வி கேட்டதை, சமூக ஊடக வீடியோக்களில் பார்த்த முதலமைச்சர், உடனே மக்களை திசைத்திருப்ப, பிரதம மந்திரியை சந்திக்க அனுமதி கேட்டதாக சொல்லப்படுகிறது! தாயுள்ளம் கொண்ட பிரதமர் உடனே அனுமதி வழங்கினார்!
திரும்பி வந்த ஸ்டாலின் 4 தினங்களுக்குப்பிறகு தென் மாவட்டங்களுக்கு சென்றார்! அங்கு மக்களெல்லாம் முதலமைச்சரிடம் வசைபாடினர்! கேள்வி கேட்டனர்! ’வந்தேன் சென்றேன்’ என உடனே கிழம்பினார் முதலமைச்சர்! ஆனால் கிருஷ்துமஸ் விழாவில் டான்பாஸ்கோ பள்ளியில் எவ்வளவு பெரிய பொய்யை கூறினார் தெரியுமா? மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் என்றதுதான் ஸ்டாலின் சொன்ன மிகப்பெரிய பொய்!
தொடர்ந்து, பேசிய முக ஸ்டாலின் அவர்கள், “கிருஷ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அதாவது மைனாரிட்டிகளுக்கு ஆதரவாக இருப்பது திமுகதான்! எடப்பாடி உங்களின் நன்பன்போல நடிக்கிறார்! அவர் பாஜகவுடன் கூட்டணி இல்லையென நடிக்கிறார்! நான்தான் உங்களின் கூட்டாளி! திமுக எப்போதுமே கிருஷ்தவர்களாகிய உங்களின் கட்சி” – என்பதுபோல் பேசினார்!
திராவிடம் பொய்! பெரியார் பொய்! கருணாநிதி பொய்! ஸ்டாலின் பொய்! உதயநிதி பொய்! அரசு விழாக்களில் பொய்! முரசொலி பொய்! இப்போது கிருஷ்துமஸ் விழா பொய்! இந்த பொய்யிலிருந்து தமிழக மக்களை மீட்டெடுத்து முன்னேற்றிட நம்மிடம் இரண்டு உண்மைகள் இருக்கின்றன! ஒன்று ”பிரதமர் நரேந்திரமோடி” என்னும் உண்மை! இன்னொன்று ”மக்கள் தலைவர் அண்ணாமலை” என்னும் உண்மை! எனத் தெரிவித்துள்ளார்.