முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி வாஜ்பாய் எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில், நாட்டின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் அவரைத் தலைவணங்குகிறேன்.
पूर्व प्रधानमंत्री आदरणीय अटल बिहारी वाजपेयी जी को उनकी जयंती पर देश के सभी परिवारजनों की ओर से मेरा कोटि-कोटि नमन। वे जीवनपर्यंत राष्ट्र निर्माण को गति देने में जुटे रहे। मां भारती के लिए उनका समर्पण और सेवा भाव अमृतकाल में भी प्रेरणास्रोत बना रहेगा। pic.twitter.com/RfiKhMb27x
— Narendra Modi (@narendramodi) December 25, 2023
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பாரத அன்னையின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும், சேவையும் அமிர்தக் காலத்தில் கூட உத்வேகம் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.