"துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது" - ராகுல் டிராவிட்!
Sep 19, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது” – ராகுல் டிராவிட்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி வீரர்கள் மீண்டு வந்துவிட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர்.

இதனால் உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இந்திய அணி வெளி வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ், பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் முதல்முறையாக களத்திற்கு திரும்ப உள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல், அனைவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் தோல்வி குறித்தும் இந்திய சீனியர் வீரர்களின் மனநிலை குறித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில், ” உலகக்கோப்பை தோல்வி நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனால் அதிலிருந்து நிச்சயம் வெளியேறி, அடுத்த தொடருக்கு தயாராக வேண்டும். அடுத்தடுத்து வரும் டெஸ்ட் தொடரை வென்று 2025ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக வேண்டும். அதனால் துவண்டு போய் கீழே விழுந்து கிடப்பதற்கான நேரம் கிடையாது.

நிச்சயம் அனைவரும் அடுத்த தொடருக்கு தயாராக உள்ளனர். உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினோம் என்றே நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நிச்சயம் சவால் நிறைந்தது. இங்குள்ள ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும்.

அதனால் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதேபோல் எந்தவொரு செஷனையும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சில நேரங்களில் டாப் ஆர்டர் சரிந்தாலும், சில பார்ட்னர்ஷிப் அமைத்து கம்பேக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் 50 முதல் 60 ரன்கள் வரை கூடுதலாக பெற வேண்டும். அதனால் எந்த அணி சிறப்பாக பேட்டிங் செய்கிறதோ, அந்த அணி தான் வெற்றிபெறும். டேட்டாவின் படி பார்த்தால் கூட பேட்டிங் செய்வது எளிதான விஷமல்ல என்பது புரியும்.

சதம் விளாசுவதை விடவும் தரமான கிரிக்கெட்டையும், அனுபவத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: rahul dravidindian cricket team coach
Share
Tweet
SendShare
Previous Post

வாஜ்பாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்! – பிரதமர் மோடி

Next Post

இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி

Related News

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies