"துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது" - ராகுல் டிராவிட்!
Sep 9, 2025, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது” – ராகுல் டிராவிட்!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி வீரர்கள் மீண்டு வந்துவிட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர்.

இதனால் உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இந்திய அணி வெளி வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ், பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் முதல்முறையாக களத்திற்கு திரும்ப உள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல், அனைவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் தோல்வி குறித்தும் இந்திய சீனியர் வீரர்களின் மனநிலை குறித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில், ” உலகக்கோப்பை தோல்வி நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனால் அதிலிருந்து நிச்சயம் வெளியேறி, அடுத்த தொடருக்கு தயாராக வேண்டும். அடுத்தடுத்து வரும் டெஸ்ட் தொடரை வென்று 2025ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக வேண்டும். அதனால் துவண்டு போய் கீழே விழுந்து கிடப்பதற்கான நேரம் கிடையாது.

நிச்சயம் அனைவரும் அடுத்த தொடருக்கு தயாராக உள்ளனர். உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினோம் என்றே நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நிச்சயம் சவால் நிறைந்தது. இங்குள்ள ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும்.

அதனால் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதேபோல் எந்தவொரு செஷனையும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சில நேரங்களில் டாப் ஆர்டர் சரிந்தாலும், சில பார்ட்னர்ஷிப் அமைத்து கம்பேக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் 50 முதல் 60 ரன்கள் வரை கூடுதலாக பெற வேண்டும். அதனால் எந்த அணி சிறப்பாக பேட்டிங் செய்கிறதோ, அந்த அணி தான் வெற்றிபெறும். டேட்டாவின் படி பார்த்தால் கூட பேட்டிங் செய்வது எளிதான விஷமல்ல என்பது புரியும்.

சதம் விளாசுவதை விடவும் தரமான கிரிக்கெட்டையும், அனுபவத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: rahul dravidindian cricket team coach
ShareTweetSendShare
Previous Post

வாஜ்பாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்! – பிரதமர் மோடி

Next Post

இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies