"துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது" - ராகுல் டிராவிட்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது” – ராகுல் டிராவிட்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி வீரர்கள் மீண்டு வந்துவிட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர்.

இதனால் உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இந்திய அணி வெளி வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ், பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் முதல்முறையாக களத்திற்கு திரும்ப உள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல், அனைவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் தோல்வி குறித்தும் இந்திய சீனியர் வீரர்களின் மனநிலை குறித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில், ” உலகக்கோப்பை தோல்வி நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனால் அதிலிருந்து நிச்சயம் வெளியேறி, அடுத்த தொடருக்கு தயாராக வேண்டும். அடுத்தடுத்து வரும் டெஸ்ட் தொடரை வென்று 2025ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக வேண்டும். அதனால் துவண்டு போய் கீழே விழுந்து கிடப்பதற்கான நேரம் கிடையாது.

நிச்சயம் அனைவரும் அடுத்த தொடருக்கு தயாராக உள்ளனர். உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினோம் என்றே நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நிச்சயம் சவால் நிறைந்தது. இங்குள்ள ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும்.

அதனால் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதேபோல் எந்தவொரு செஷனையும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சில நேரங்களில் டாப் ஆர்டர் சரிந்தாலும், சில பார்ட்னர்ஷிப் அமைத்து கம்பேக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் 50 முதல் 60 ரன்கள் வரை கூடுதலாக பெற வேண்டும். அதனால் எந்த அணி சிறப்பாக பேட்டிங் செய்கிறதோ, அந்த அணி தான் வெற்றிபெறும். டேட்டாவின் படி பார்த்தால் கூட பேட்டிங் செய்வது எளிதான விஷமல்ல என்பது புரியும்.

சதம் விளாசுவதை விடவும் தரமான கிரிக்கெட்டையும், அனுபவத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: rahul dravidindian cricket team coach
ShareTweetSendShare
Previous Post

வாஜ்பாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்! – பிரதமர் மோடி

Next Post

இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies