சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திரண்டதால் மணாலி அடல் சுரங்கப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மனாலி ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும், பனிப்பொழிவை அனுபவிப்பதற்காகவும், தங்கள் நீண்ட விடுமுறையைக் கழிப்பதற்காகவும், குறிப்பாக குளிர்காலத்தில், நாடு முழுவதிலுமிருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் திரள்கின்றனர்.
இந்நிலையில், சனி,ஞாயிறி, கிறிஸ்துமஸ், விடுமுறை என்பதால் நாடு முழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் முக்கிய சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மணாலியில் இருந்து அடல் சுரங்கப்பாதை வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.