பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி!
Oct 2, 2025, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி!

அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்திய ஹபீஸ் சயீத்! 

Web Desk by Web Desk
Dec 25, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகவும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் முகமது சயீத்தின் அரசியல் அமைப்பான பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் (பிஎம்எம்எல்) அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஹபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் லாகூர் நாடாளுமன்ற தொகுதியில் (NA-127) போட்டியிடுகிறார். பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் கட்சியின் மத்தியத் தலைவர் காலித் மசூத், சிந்து (NA-130) தொகுதியில் பாகிஸ்தான்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இதனிடையே தேசிய மற்றும் மாகாண தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்தது. லாகூரில் உள்ள 14 தேசிய சட்டமன்றம் மற்றும் 30 மாகாண தொகுதிகளுக்கு 600 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வரும் நாட்களில் வெளியிடும் என்பதால், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2019ஆம் ஆண்டு ஜூலை 17, முதல் சிறையில்  இருக்கும் முஹம்மது ஹபீஸ் சயீத், ஏப்ரல் 2022 இல் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் “பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததற்காக” 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட போதிலும், சயீத் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanMumbai terror attack mastermindHafiz SaeedPakistan Markazi Muslim LeagueTalha Saeedpakistan poll
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம்: 28 அமைச்சர்கள் பதவியேற்பு!

Next Post

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது! – அண்ணாமலை

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies