ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
பூஞ்ச் மாவட்டத்தில் முக்கிய சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் மூன்று மாடி கட்டடத்தில கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இதை அடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.