குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!
Jul 23, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் செல்லும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

புதுடெல்லி சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இதன் அருகே நேற்று மாலை 5:48 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. உடனடியாக மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், போலீஸாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இஸ்ரேல் தூதர் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. இக்கடிதம் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தூதரகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீஸார் கூறுகையில், “குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பக்க கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதம் எழுதியதில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்” என்றனர்.

அதேபோல, இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்புக் குழு டெல்லி போலீஸாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையே, தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புக் கவுன்சில், இந்தியா செல்லவிருக்கும் அந்நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

ரெஸ்டாரென்ட், ஹோட்டல்கள், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்துவது போன்ற அம்சங்களை தவிர்க்க வேண்டும். இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புக் குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாகவே, ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் டெல்லியிலும் இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags: Bomb blastdelhiwarningIsrael Embassy
ShareTweetSendShare
Previous Post

எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுகசிவு! – ஆளுநர் ஆர். என். ரவி

Next Post

தன் மகனைப் பார்க்க ஏங்கும் கிரிக்கெட் வீரர் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies