குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!
Jan 14, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் செல்லும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

புதுடெல்லி சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இதன் அருகே நேற்று மாலை 5:48 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. உடனடியாக மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், போலீஸாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இஸ்ரேல் தூதர் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. இக்கடிதம் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தூதரகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீஸார் கூறுகையில், “குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பக்க கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதம் எழுதியதில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்” என்றனர்.

அதேபோல, இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்புக் குழு டெல்லி போலீஸாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையே, தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புக் கவுன்சில், இந்தியா செல்லவிருக்கும் அந்நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

ரெஸ்டாரென்ட், ஹோட்டல்கள், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்துவது போன்ற அம்சங்களை தவிர்க்க வேண்டும். இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புக் குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாகவே, ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் டெல்லியிலும் இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags: Bomb blastdelhiwarningIsrael Embassy
ShareTweetSendShare
Previous Post

எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுகசிவு! – ஆளுநர் ஆர். என். ரவி

Next Post

தன் மகனைப் பார்க்க ஏங்கும் கிரிக்கெட் வீரர் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies