குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் செல்லும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

புதுடெல்லி சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இதன் அருகே நேற்று மாலை 5:48 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. உடனடியாக மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், போலீஸாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இஸ்ரேல் தூதர் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. இக்கடிதம் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தூதரகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீஸார் கூறுகையில், “குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பக்க கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதம் எழுதியதில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்” என்றனர்.

அதேபோல, இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்புக் குழு டெல்லி போலீஸாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையே, தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புக் கவுன்சில், இந்தியா செல்லவிருக்கும் அந்நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

ரெஸ்டாரென்ட், ஹோட்டல்கள், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்துவது போன்ற அம்சங்களை தவிர்க்க வேண்டும். இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புக் குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாகவே, ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் டெல்லியிலும் இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags: Bomb blastdelhiwarningIsrael Embassy
Share
Tweet
SendShare
Previous Post

எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுகசிவு! – ஆளுநர் ஆர். என். ரவி

Next Post

தன் மகனைப் பார்க்க ஏங்கும் கிரிக்கெட் வீரர் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies