கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Mar 15, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அப்போது, மனுதாரருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், கோவில் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை அமலி நிறுவனம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், கோவிலின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, 1985 -ல் தென்காசியில் உள்ள சப் -கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதில், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டது. இதில், 11 ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதி நிலத்தை அமலி கான்வென்ட் திருப்பி அளித்தது.

மேலும், நிலத்தின் வாடகையாக ஆண்டுக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதால் அமலி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. ஆனால், இந்த நோட்டீசை அமலி நிறுவனம் புறக்கணித்துவிட்டது.

மேலும், இந்து சயம அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை நீட்டிப்பு செய்யாமல் அலட்சியம் செய்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பான விவகாரங்களில் இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமலி கான்வென்ட் ஆகியவை தாக்கல் செய்த மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கோவில் சொத்தை அமலி கான்வென்ட் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த மனுதாரர் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

எனவே, வரும் 2024- மார்ச் மாதம் 31-க்குள் கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அமலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

Tags: Madurai high court
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Next Post

‘சதம்’ அடித்து சாதனை படைத்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies