கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Oct 4, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அப்போது, மனுதாரருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், கோவில் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை அமலி நிறுவனம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், கோவிலின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, 1985 -ல் தென்காசியில் உள்ள சப் -கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதில், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டது. இதில், 11 ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதி நிலத்தை அமலி கான்வென்ட் திருப்பி அளித்தது.

மேலும், நிலத்தின் வாடகையாக ஆண்டுக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதால் அமலி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. ஆனால், இந்த நோட்டீசை அமலி நிறுவனம் புறக்கணித்துவிட்டது.

மேலும், இந்து சயம அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை நீட்டிப்பு செய்யாமல் அலட்சியம் செய்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பான விவகாரங்களில் இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமலி கான்வென்ட் ஆகியவை தாக்கல் செய்த மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கோவில் சொத்தை அமலி கான்வென்ட் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த மனுதாரர் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

எனவே, வரும் 2024- மார்ச் மாதம் 31-க்குள் கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அமலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

Tags: Madurai high court
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Next Post

‘சதம்’ அடித்து சாதனை படைத்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies