பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!
Jul 25, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்தார். நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். இதன் பிறகு, பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்தது.

இதனால், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கி விட்டார். இதன் பிறகு, இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்து நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சி வந்தது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பினார்.

இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஷ் கூறுகையில், “ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்து விட்டது. ஆகவே, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆட்சேபனையுமின்றி மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன” என்றார்.

Tags: pakistannominationNawas Sherif
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்! – சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies