கன்னடத்தில் பெயர் பலகை இல்லாத கடைகள்: சூறையாடிய கன்னட அமைப்பினர்!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னடத்தில் பெயர் பலகை இல்லாத கடைகள்: சூறையாடிய கன்னட அமைப்பினர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் ஆங்கிலம் மற்றும் தாங்கள் சார்ந்த தாய் மொழிகளை எழுதி வைத்திருந்தனர். இதற்கு, கன்னட மொழி இல்லை எனக் கூறி கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கர்நாடக ரக்ஷன வேதிக் எனப்படும் கர்நாடக பாதுகாப்பு மன்றம் மல்லேஸ்வரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட குடிமை அமைப்பின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், “கிரேட்டர் பெங்களூரு பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் கடைகள், உணவகங்கள், பிற வணிக நிறுவனங்கள் கன்னட பெயர்ப் பலகை விதியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கான காலக்கெடுவாக 2024 பிப்ரவரி 28-ம் தேதி நிர்ணயிக்கப்படும். மால்களில் உள்ள கடைகளிலும் பெயர்ப் பலைகளை கன்னடத்தில் மாற்ற வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை சட்ட எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். ஆணையரின் இந்த உத்தரவு கர்நாடகாவில் மொழி பிரச்சனையை கிளப்பியது.

இதனால் கன்னட மொழி பேசுபவர்களுக்கும், ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மேலும், இது தொடர்பாக கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பிரச்சார வாகனத்தில் வந்த பெண் பேசுகையில், “இது கர்நாடக மாநிலம். கன்னடர்கள் மாநிலத்திற்கான பெருமை.

உங்கள் மாநிலத்திற்கு நீங்கள் சென்று உங்கள் பெருமைகளைக் காட்டுங்கள். மார்வாடிகளே, அடுத்த முறை நீங்கள் கன்னடம் தெரியாது என்று சொன்னால் நீங்கள்தான் இலக்காவீர்கள்” என்று ஆவேசமாகக் கூறினார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று பெங்களூருவில் ஆங்கிலத்தில் இருந்த கடைகளின் பெயர் பலகைகளை கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் அடித்து சேதப்படுத்தினர். பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தனியார் அலுவலகங்களில் வேறு மொழியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை அப்புறப்படுத்தியும், கடைகள், ஷாப்பிங் மால்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது. போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

Tags: karnatakaprotestKannada organisation
ShareTweetSendShare
Previous Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

Next Post

அயோத்தி இராமர் கோவில் வரைபடம் வெளியீடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies