கன்னடத்தில் பெயர் பலகை இல்லாத கடைகள்: சூறையாடிய கன்னட அமைப்பினர்!
May 30, 2025, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னடத்தில் பெயர் பலகை இல்லாத கடைகள்: சூறையாடிய கன்னட அமைப்பினர்!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் ஆங்கிலம் மற்றும் தாங்கள் சார்ந்த தாய் மொழிகளை எழுதி வைத்திருந்தனர். இதற்கு, கன்னட மொழி இல்லை எனக் கூறி கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கர்நாடக ரக்ஷன வேதிக் எனப்படும் கர்நாடக பாதுகாப்பு மன்றம் மல்லேஸ்வரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட குடிமை அமைப்பின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், “கிரேட்டர் பெங்களூரு பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் கடைகள், உணவகங்கள், பிற வணிக நிறுவனங்கள் கன்னட பெயர்ப் பலகை விதியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கான காலக்கெடுவாக 2024 பிப்ரவரி 28-ம் தேதி நிர்ணயிக்கப்படும். மால்களில் உள்ள கடைகளிலும் பெயர்ப் பலைகளை கன்னடத்தில் மாற்ற வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை சட்ட எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். ஆணையரின் இந்த உத்தரவு கர்நாடகாவில் மொழி பிரச்சனையை கிளப்பியது.

இதனால் கன்னட மொழி பேசுபவர்களுக்கும், ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மேலும், இது தொடர்பாக கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பிரச்சார வாகனத்தில் வந்த பெண் பேசுகையில், “இது கர்நாடக மாநிலம். கன்னடர்கள் மாநிலத்திற்கான பெருமை.

உங்கள் மாநிலத்திற்கு நீங்கள் சென்று உங்கள் பெருமைகளைக் காட்டுங்கள். மார்வாடிகளே, அடுத்த முறை நீங்கள் கன்னடம் தெரியாது என்று சொன்னால் நீங்கள்தான் இலக்காவீர்கள்” என்று ஆவேசமாகக் கூறினார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று பெங்களூருவில் ஆங்கிலத்தில் இருந்த கடைகளின் பெயர் பலகைகளை கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் அடித்து சேதப்படுத்தினர். பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தனியார் அலுவலகங்களில் வேறு மொழியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை அப்புறப்படுத்தியும், கடைகள், ஷாப்பிங் மால்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது. போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

Tags: karnatakaprotestKannada organisation
ShareTweetSendShare
Previous Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

Next Post

அயோத்தி இராமர் கோவில் வரைபடம் வெளியீடு!

Related News

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் சாதாரண ஒன்றாகிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் : ஆளுநர் ஆர்.என். ரவி

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies