மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
Jul 24, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது ஏராளமான கடன் செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற கடன் செயலிகள் அதிக அளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைத் திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.

மேலும், செல்போனில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை திருடி, கடன் வாங்கியவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால், இவ்வகை செயலிகளில் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.

தவிர, கடன் செயலிகள் என்ற பெயரில் தகவல் திருட்டு, வங்கி விவரங்கள் திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே, இதுபோன்ற மோசடி செயலிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தள நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவாதித்தது. அப்போது, சமூக வலைத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், மோசடி கடன் செயலிகள் குறித்த விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், “மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஏனெனில், அவை இணையத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இணையம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகள் மட்டும் கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் விதிகளில் இணையத்தில் வெளியிட தடை செய்யப்பட்ட 11 விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளது” என்று கூறினார்.

Tags: central governmentMinisterRajeev Chandra sekarFraudulent Loan AppCracking down
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 702 பேருக்கு கொரோனா உறுதி!

Next Post

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies