மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 28, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது ஏராளமான கடன் செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற கடன் செயலிகள் அதிக அளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைத் திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.

மேலும், செல்போனில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை திருடி, கடன் வாங்கியவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால், இவ்வகை செயலிகளில் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.

தவிர, கடன் செயலிகள் என்ற பெயரில் தகவல் திருட்டு, வங்கி விவரங்கள் திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே, இதுபோன்ற மோசடி செயலிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தள நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவாதித்தது. அப்போது, சமூக வலைத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், மோசடி கடன் செயலிகள் குறித்த விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், “மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஏனெனில், அவை இணையத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இணையம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகள் மட்டும் கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் விதிகளில் இணையத்தில் வெளியிட தடை செய்யப்பட்ட 11 விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளது” என்று கூறினார்.

Tags: central governmentMinisterRajeev Chandra sekarFraudulent Loan AppCracking down
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 702 பேருக்கு கொரோனா உறுதி!

Next Post

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies