நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுதலை!
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுதலை!

ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிரந்தர போர் நிறுத்தம் செய்ய சம்மதித்தால் மட்டுமே, பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்களை கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றனர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், சுரங்கப் பாதைகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவற்றையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கியது.

இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் நூற்றுக் கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 21,000 பாலஸ்தீனியர்கள் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 40,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு, காஸா நகரில் குடிநீர், மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கவில்லை.

எனவே, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல, ஐ.நா. சபையும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அனைத்துக் கோரிக்கைகளையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது. ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, கத்தார், எகிப்து நாடுகளின் உதவியுடன் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது, 100 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேல் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது.

இதன் பிறகு, மீண்டும் போர் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் இராணுவத்தினர் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி அழித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகள் பலரும் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார், எகிப்து உதவியுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழலில்தான், நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே, பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் இராணுவமோ ஹமாஸ் தீவிரவாதிகளின் நிபந்தனையை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. வழக்கம்போல தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Tags: WARIsraelHamasCease Fire
ShareTweetSendShare
Previous Post

அமித்ஷாவின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது! 

Next Post

தமிழர்களை பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை வெளியிடுகிறார்!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies