நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுதலை!
Jul 25, 2025, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுதலை!

ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிரந்தர போர் நிறுத்தம் செய்ய சம்மதித்தால் மட்டுமே, பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்களை கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றனர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், சுரங்கப் பாதைகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவற்றையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கியது.

இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் நூற்றுக் கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 21,000 பாலஸ்தீனியர்கள் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 40,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு, காஸா நகரில் குடிநீர், மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கவில்லை.

எனவே, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல, ஐ.நா. சபையும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அனைத்துக் கோரிக்கைகளையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது. ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, கத்தார், எகிப்து நாடுகளின் உதவியுடன் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது, 100 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேல் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது.

இதன் பிறகு, மீண்டும் போர் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் இராணுவத்தினர் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி அழித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகள் பலரும் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார், எகிப்து உதவியுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழலில்தான், நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே, பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் இராணுவமோ ஹமாஸ் தீவிரவாதிகளின் நிபந்தனையை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. வழக்கம்போல தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Tags: WARIsraelHamasCease Fire
ShareTweetSendShare
Previous Post

அமித்ஷாவின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது! 

Next Post

தமிழர்களை பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை வெளியிடுகிறார்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies