புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானம் (எஸ்.ஜி.வி.பி.) சார்பில் பூஜ்ய பூரணி சுவாமி ஸ்மிருதி மஹோத்சவம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “ஆளுமை மேம்பாடு சிறப்பாக இல்லாவிட்டால், நம் தேசத்தை நம்மால் கட்டமைக்க முடியாது.

குருகுலக் கல்வி முறை ஆளுமை வளர்ச்சியின் பாரம்பரியத்தை நன்கு உள்வாங்கி இருக்கிறது. இந்த ஸ்ரீசுவாமி நாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானத்திற்கு வரும் ஒரு குழந்தை, தேச பக்தராகவும், நன்கு கற்றறிந்த குடிமகனாகவும் சமூகத்திற்குத் திரும்புகிறது.

இந்திய கலாச்சாரம், சனாதன கலாச்சாரம் மற்றும் பக்தியின் அனைத்து மதிப்புகளும் இங்குள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகின்றன. இந்த குருகுலம் குஜராத்துக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பல நல்ல மற்றும் வெற்றிகரமான குடிமக்களை வழங்கியுள்ளது.

போதைப் பொருள் இல்லாத வாழ்க்கை, இறை வழிபாடு, நல்ல மனப்பான்மை, வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தை அனுமதிக்காமல் இருப்பது, பசு சேவை முதல் விவசாயம் வரை நிலத்துடன் இணைந்திருப்பது போன்ற விழுமியங்களுடன் சமஸ்கிருதம், சாஸ்திரம், இசை, விளையாட்டு உள்ளிட்ட முழுமையான கல்விக்கான சூழல் இங்கு சிறப்பாக உள்ளது.

சுவாமி நாராயண் அமைப்பின் பல்வேறு நிறுவனங்களின் குருகுலங்கள் குஜராத்தில் செயல்படாமல் இருந்திருந்தால், மாநிலத்தில் கல்வி பின்தங்கி இருந்திருக்கும். அணுக முடியாத பழங்குடிப் பகுதிகளில் மதமாற்றத்தைத் தடுக்க சுவாமி நாராயண் அமைப்பு குருகுலங்களைத் தொடங்கியது.

பின்னர், அவற்றின் மூலம் பழங்குடியின குழந்தைகளை சனாதன தர்மத்துடன் இணைத்தது. அவர்களுக்கு கல்வியை வழங்கி, வாழ்க்கையில் உயரங்களை அடைய இந்த அமைப்பு தைரியத்தை அளித்தது. எஸ்.ஜி.வி.பி குருகுலம் என்பது தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் நவீன கல்வி ஆகியவற்றின் கலவையாகும்.

இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா பலவீனமான நிலையில் இருந்தது. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உலகின் முதல் நாடாக மாற வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2047-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், உலகின் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும். 2014-ம் ஆண்டில், இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று 5-வது இடத்தில் உள்ளது.

புதிய கல்விக் கொள்கை நமது பண்டைய கல்வி பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. இது நவீனத்துவத்தையும் பழங்கால இந்தியக் கல்வி முறையையும் இணைப்பாக கொண்டுள்ளது. இதை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள்” என்று கூறினார்.

Tags: Amit ShahAhmedabadPujya Purani Swami Smriti Mahotsav
ShareTweetSendShare
Previous Post

வங்கிகளில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: நிர்மலா சீதாராமன்!

Next Post

இதுவரை 1.25 கோடி சொத்து அட்டைகள் விநியோகம்: மத்திய அரசு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies