புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!
Jun 14, 2026, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானம் (எஸ்.ஜி.வி.பி.) சார்பில் பூஜ்ய பூரணி சுவாமி ஸ்மிருதி மஹோத்சவம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “ஆளுமை மேம்பாடு சிறப்பாக இல்லாவிட்டால், நம் தேசத்தை நம்மால் கட்டமைக்க முடியாது.

குருகுலக் கல்வி முறை ஆளுமை வளர்ச்சியின் பாரம்பரியத்தை நன்கு உள்வாங்கி இருக்கிறது. இந்த ஸ்ரீசுவாமி நாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானத்திற்கு வரும் ஒரு குழந்தை, தேச பக்தராகவும், நன்கு கற்றறிந்த குடிமகனாகவும் சமூகத்திற்குத் திரும்புகிறது.

இந்திய கலாச்சாரம், சனாதன கலாச்சாரம் மற்றும் பக்தியின் அனைத்து மதிப்புகளும் இங்குள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகின்றன. இந்த குருகுலம் குஜராத்துக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பல நல்ல மற்றும் வெற்றிகரமான குடிமக்களை வழங்கியுள்ளது.

போதைப் பொருள் இல்லாத வாழ்க்கை, இறை வழிபாடு, நல்ல மனப்பான்மை, வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தை அனுமதிக்காமல் இருப்பது, பசு சேவை முதல் விவசாயம் வரை நிலத்துடன் இணைந்திருப்பது போன்ற விழுமியங்களுடன் சமஸ்கிருதம், சாஸ்திரம், இசை, விளையாட்டு உள்ளிட்ட முழுமையான கல்விக்கான சூழல் இங்கு சிறப்பாக உள்ளது.

சுவாமி நாராயண் அமைப்பின் பல்வேறு நிறுவனங்களின் குருகுலங்கள் குஜராத்தில் செயல்படாமல் இருந்திருந்தால், மாநிலத்தில் கல்வி பின்தங்கி இருந்திருக்கும். அணுக முடியாத பழங்குடிப் பகுதிகளில் மதமாற்றத்தைத் தடுக்க சுவாமி நாராயண் அமைப்பு குருகுலங்களைத் தொடங்கியது.

பின்னர், அவற்றின் மூலம் பழங்குடியின குழந்தைகளை சனாதன தர்மத்துடன் இணைத்தது. அவர்களுக்கு கல்வியை வழங்கி, வாழ்க்கையில் உயரங்களை அடைய இந்த அமைப்பு தைரியத்தை அளித்தது. எஸ்.ஜி.வி.பி குருகுலம் என்பது தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் நவீன கல்வி ஆகியவற்றின் கலவையாகும்.

இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா பலவீனமான நிலையில் இருந்தது. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உலகின் முதல் நாடாக மாற வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2047-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், உலகின் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும். 2014-ம் ஆண்டில், இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று 5-வது இடத்தில் உள்ளது.

புதிய கல்விக் கொள்கை நமது பண்டைய கல்வி பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. இது நவீனத்துவத்தையும் பழங்கால இந்தியக் கல்வி முறையையும் இணைப்பாக கொண்டுள்ளது. இதை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள்” என்று கூறினார்.

Tags: Amit ShahAhmedabadPujya Purani Swami Smriti Mahotsav
ShareTweetSendShare
Previous Post

வங்கிகளில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: நிர்மலா சீதாராமன்!

Next Post

இதுவரை 1.25 கோடி சொத்து அட்டைகள் விநியோகம்: மத்திய அரசு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies