அயோத்தி இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம்: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடியின் 108-வது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கஹி வந்திந்தார்கள்.

அவர்களுடன் தொடர்பு கொள்ள முதல்முறையாக ‘பாஷினி’ என்ற AI கருவியைப் பயன்படுத்தினேன். நான் இந்தியில் உரையாற்றியதை, அவர்கள் தமிழ் மொழியில் கேட்டார்கள். ஆகவே, நிகழ்நேர மொழிபெயர்ப்பு தொடர்பான AI கருவிகளை ஆராய இன்றைய இளம் தலைமுறையினரை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகரிப்பதால், பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ‘ஜோகோ டெக்னாலஜிஸ்’ போன்ற ஸ்டார்ட் அப்கள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. புதுமையான ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப்கள், ஃபிட் இந்தியா கனவை நனவாக்க பங்களிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக, நீங்கள் எழுதும் கடிதத்தின் மூலமே இதுபோன்ற தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன. ஆகவே, எனக்கு தொடர்ந்து எழுதுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன.

சில பாடல்கள் மற்றும் பஜனைகளை சமூக வலைதளத்தில் நானும் பகிர்ந்திருக்கிறேன். இதன் மூலம் கலை உலகமும், தனது தனித்துவமான ஸ்டைலில், வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.

இதுபோன்ற படைப்புகளை அனைவரும் சமூக வலைதளத்தில் ‛ஸ்ரீராம் பஜன் (Shri Ram Bhajan)’ என்ற ஹேஷ்டாக்கில் பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வாக மாறும். மக்கள் இராமரின் நெறிமுறைகளை பின்பற்றுவார்கள்” என்றார்.

பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும், டெல்லியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முதல்வர் பஜன்லால் ஷர்மாவும், அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலும் கண்டுகளித்தனர்.

Tags: PM Modimaan ki batt
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : அழைப்பிதழ் வழங்கும் பணியை தொடங்கியது ஆர்எஸ்எஸ்!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அண்ணாமலை மற்றும் குடும்பத்திற்கு அழைப்பிதழ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies