அயோத்தி இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம்: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 01:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடியின் 108-வது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கஹி வந்திந்தார்கள்.

அவர்களுடன் தொடர்பு கொள்ள முதல்முறையாக ‘பாஷினி’ என்ற AI கருவியைப் பயன்படுத்தினேன். நான் இந்தியில் உரையாற்றியதை, அவர்கள் தமிழ் மொழியில் கேட்டார்கள். ஆகவே, நிகழ்நேர மொழிபெயர்ப்பு தொடர்பான AI கருவிகளை ஆராய இன்றைய இளம் தலைமுறையினரை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகரிப்பதால், பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ‘ஜோகோ டெக்னாலஜிஸ்’ போன்ற ஸ்டார்ட் அப்கள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. புதுமையான ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப்கள், ஃபிட் இந்தியா கனவை நனவாக்க பங்களிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக, நீங்கள் எழுதும் கடிதத்தின் மூலமே இதுபோன்ற தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன. ஆகவே, எனக்கு தொடர்ந்து எழுதுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன.

சில பாடல்கள் மற்றும் பஜனைகளை சமூக வலைதளத்தில் நானும் பகிர்ந்திருக்கிறேன். இதன் மூலம் கலை உலகமும், தனது தனித்துவமான ஸ்டைலில், வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.

இதுபோன்ற படைப்புகளை அனைவரும் சமூக வலைதளத்தில் ‛ஸ்ரீராம் பஜன் (Shri Ram Bhajan)’ என்ற ஹேஷ்டாக்கில் பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வாக மாறும். மக்கள் இராமரின் நெறிமுறைகளை பின்பற்றுவார்கள்” என்றார்.

பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும், டெல்லியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முதல்வர் பஜன்லால் ஷர்மாவும், அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலும் கண்டுகளித்தனர்.

Tags: PM Modimaan ki batt
Share
Tweet
SendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : அழைப்பிதழ் வழங்கும் பணியை தொடங்கியது ஆர்எஸ்எஸ்!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அண்ணாமலை மற்றும் குடும்பத்திற்கு அழைப்பிதழ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies