இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. புதிய முதலீடு விமான போக்குவரத்துத் துறையின் மீது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு விமான போக்குவரத்துத் துறையில் நடந்த நிகழ்வுகளைக் குறித்துப் பார்ப்போம்.
1. விமான போக்குவரத்து பயணிகள் அதிகரிப்பு :
2022-23 ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை 13.60 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் இது அதிகமாகும். இது உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டு வருவது உறுதியாகியுள்ளது.
2. மெகா ஆர்டர் :
ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 843 விமானங்களை வாங்குவதற்கான ஏர் இந்தியா நிறுவனம் ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் விமான வணிக சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய வலுவான இருப்பை மீண்டும் தக்க வைப்பதற்கான முயற்சியாக இந்த ஒப்பந்தம் உள்ளது என நிபுணர்கள் கூறினர்.
3. இன்டிகோ சாதனை :
அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 ஏ320 ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
4. Go First விமானச் சேவைக்கு இழப்பீடு :
வாடியா குழுமத்திற்குச் சொந்தமான Go First விமானச் சேவையை நிறுத்தப்போவதாகவும், திவால் நிலைத் தீர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இனி நிதிக் கடமைகளைத் தொடர முடியாது என்றும், கூறியது. அமெரிக்க நிறுவனமான பிராட் & விட்னியிடம் வாங்கிய பழுதடைந்த என்ஜின்கள் காரணமாக 50% இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
5. விமானத்தில் மது அருந்திய சர்ச்சை :
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். இச்சம்பவம் கிளப்பிய சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் ஆண் பயணி ஒருவர் கலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது.
இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் தனது மது விநியோகக் கொள்கையை மாற்றி அமைத்தது.