ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!
Aug 15, 2025, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைகள் திருடிய நகைக்கடை ஊழியர்கள். வேலியே பயிரை மேய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம். இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு நகைகளை பறிமுதல் செய்து மூவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் ஜூவல்லரி பிரபல கடையில் 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை, ஒரு BMW சொகுசு இருச்சக்கர வாகனம், ஆப்பிள் ஐ ஃபோன் உட்பட இரண்டு விலை உயர்ந்த ஃபோன் களும் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள சுரேஷ் ஜூவல்லரி என்ற பிரபல நகை கடையில் 50 க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு ஷோகேஸில் இருந்த தங்க நகைகள் குறைவாக இருந்ததை மேலாளர் கண்டுபிடித்தனர். பின்னர் கடை ஊழியர் யாருக்கும் தெரியாமல் நகைகளை பரிசோதனை செய்த போது தங்க நகை வெள்ளி நகைகளும் மாயமாகி இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி.

தொடர்ந்து பார்க்கும் போது விற்பனையாளரக பணிபுரிந்த அருமனை பகுதியை சேர்ந்த அனிஷ் (29) என்பவர் எடுத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. ஒரு கட்டத்தில் அனீஷ் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆடம்பரமாக புதிய வீடு கட்ட பட்ட நிலையில் உரிமையாளர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் அனிஷை மார்த்தாண்டம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, இதில் அவர் அங்குள்ள பம்மம் பகுதியை சேர்ந்த ஷாலினி மற்றும் அபிஷா ஆகிய இரு பெண் ஊழியர்கள் உடந்தையுடன் சிறுக சிறுக கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார்.

இதில் திருடிய நகைகள் விற்பனை ஆகும் போது உதவிய இரு பெண்களுக்கும் பங்கை கொடுத்துள்ளேன் எனவும் அனீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் திருடிய அனைத்து நகைகளும் ஸ்டாக்கில் இருப்பது போன்றே கம்யூட்டரில் அந்த பெண் ஊழியர்கள் பதிவு செய்து வந்தனர். நாங்கள் சிக்கி கொள்வோம் என சிறிதளவு கூட எதிர்பார்க்கவில்லை எனவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர், திருடிய 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ஒரு BMW சொகுசு இருச்சக்கர வாகனம், ஆப்பிள் ஐ ஃபோன் உட்பட இரண்டு விலை உயர்ந்த ஃபோன் களும் பறிமுதல் செய்தனர். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.

தொடர்ந்து பெண் ஊழியர்கள் இருவர் உட்பட மூவரையும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை கடை ஊழியர்களே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Tags: jewel shopkanyakumari3 arrested
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி : சென்னையில் இன்று தொடக்கம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!

Related News

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies