ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!
Sep 13, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 04:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைகள் திருடிய நகைக்கடை ஊழியர்கள். வேலியே பயிரை மேய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம். இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு நகைகளை பறிமுதல் செய்து மூவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் ஜூவல்லரி பிரபல கடையில் 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை, ஒரு BMW சொகுசு இருச்சக்கர வாகனம், ஆப்பிள் ஐ ஃபோன் உட்பட இரண்டு விலை உயர்ந்த ஃபோன் களும் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள சுரேஷ் ஜூவல்லரி என்ற பிரபல நகை கடையில் 50 க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு ஷோகேஸில் இருந்த தங்க நகைகள் குறைவாக இருந்ததை மேலாளர் கண்டுபிடித்தனர். பின்னர் கடை ஊழியர் யாருக்கும் தெரியாமல் நகைகளை பரிசோதனை செய்த போது தங்க நகை வெள்ளி நகைகளும் மாயமாகி இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி.

தொடர்ந்து பார்க்கும் போது விற்பனையாளரக பணிபுரிந்த அருமனை பகுதியை சேர்ந்த அனிஷ் (29) என்பவர் எடுத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. ஒரு கட்டத்தில் அனீஷ் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆடம்பரமாக புதிய வீடு கட்ட பட்ட நிலையில் உரிமையாளர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் அனிஷை மார்த்தாண்டம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, இதில் அவர் அங்குள்ள பம்மம் பகுதியை சேர்ந்த ஷாலினி மற்றும் அபிஷா ஆகிய இரு பெண் ஊழியர்கள் உடந்தையுடன் சிறுக சிறுக கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார்.

இதில் திருடிய நகைகள் விற்பனை ஆகும் போது உதவிய இரு பெண்களுக்கும் பங்கை கொடுத்துள்ளேன் எனவும் அனீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் திருடிய அனைத்து நகைகளும் ஸ்டாக்கில் இருப்பது போன்றே கம்யூட்டரில் அந்த பெண் ஊழியர்கள் பதிவு செய்து வந்தனர். நாங்கள் சிக்கி கொள்வோம் என சிறிதளவு கூட எதிர்பார்க்கவில்லை எனவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர், திருடிய 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ஒரு BMW சொகுசு இருச்சக்கர வாகனம், ஆப்பிள் ஐ ஃபோன் உட்பட இரண்டு விலை உயர்ந்த ஃபோன் களும் பறிமுதல் செய்தனர். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.

தொடர்ந்து பெண் ஊழியர்கள் இருவர் உட்பட மூவரையும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை கடை ஊழியர்களே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Tags: kanyakumari3 arrestedjewel shop
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி : சென்னையில் இன்று தொடக்கம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies