செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில், ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குமாரவாடி பகுதியில் அண்மையில் ஆட்டோ டிரைவர் குமார் என்பவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கடந்த டிசம்பர் 21-ம் தேதி அவரை உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
மேலும், குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் போது குமாரின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்தனர்.
மேலும், கொலைக்கான காரணம் என்ன என்றும், கொலையாளிகள் குறித்தும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தாம்பரம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தாமோதரன் மற்றும் அவரது மகன் ஆகியோர் குமார் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.