மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை!
Jan 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும் தடை விதித்திருக்கிறது.

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு (பி.எஃப்.ஐ.) மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பு, தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது மற்றும் ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களை துாண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அந்த அமைப்புக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்காக, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரங்களைச் செய்ததிலும், பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தீவிரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்த ஒரு தனி நபரோ, அமைப்போ ஈடுபட்டால் உடனடியாக முறியடிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் இருந்த சையத் அலி ஷா கிலானி, அவ்வமைப்பில் இருந்து வெளியேறி, தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினார். இவர், பாகிஸ்தான் ஆதரவாளராகவும், காஷ்மீரி ஜிகாதி குழுக்களின் தலைவராகவும் கருதப்படுகிறார்.

சையத் அலி ஷா கிலானியின் மறைவுக்குப் பிறகு, அவ்வமைப்பின் தலைவராக மசரத் ஆலம் பட் பொறுப்பேற்றார். இவரும், இந்திய எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானிய ஆதரவுக்குப் பெயர் பெற்றவர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: OrganizationAmit ShahHome ministerterroristDeclaredTehreek-e-Hurriyat
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கரில் இருந்து அயோத்திக்கு 300 மெட்ரிக் டன் அரசி!

Next Post

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies